சுங்கத் துறையினர் இம்மாதம் 22ஆம் தேதி 'கல் சர்க்கிள்' வட்டாரத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 2,500 பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த கள்ள சிகரெட்டுகளும் உபரியாக இருந்த 19 கள்ள சிகரெட்டுகளும் பிடிபட்டன.
இதன் தொடர்பில் பங்ளாதேஷைச் சேர்ந்த ஆடவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வயது முறையே 23, 28.
காலியாக இருந்த தொழிற்துறைக் கட்டடத்தின் இரும்புக் கதவின்மேல் ஏறி குதித்து நுழைய முயன்ற ஆடவர்கள் இருவரும் அமலாக்க அதிகாரிகளைப் பார்த்தவுடன் தப்பியோட முயன்றனர்.
பிடிபட்ட அவர்கள் மூலம், அந்தக் கட்டடத்தில் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கள்ள சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இவற்றின் மூலம் மொத்தம் $213,500 வரி ஏய்க்கப்படவிருந்ததாகவும் பொருள், சேவை வரி தொடர்பில் $16,990 ஏய்க்க முயன்றதாகவும் அதிகாரிகள் கூறினர்.
வரி ஏய்ப்பு நிரூபிக்கப்பட்டால் வரித்தொகையைப்போல 40 மடங்கு வரையிலான அபராதமோ ஆறாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
இதுகுறித்த விசாரணை தொடர்கிறது.

