பண மோசடியில் ஈடுபட்ட முழு நேர தேசிய சேவையாளர்

பண மோசடியில் ஈடுபட்ட முழு நேர தேசிய சேவையாளர்

2 mins read
49d96cf5-49e6-4cbb-aa29-8f10cd16621d
-

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யில் முழு நேர தேசிய சேவை­யா­ள­ராக இருந்­த­போது கிருமிப் பரவல் விதி­மு­றை­கள் தொடர்­பான குற்­றச்­செ­ய­லுக்­காக நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு விதிக்­கப்­பட்­டது.

அந்­நே­ரத்­தில் இரண்டு வங்­கிக் கணக்­கு­க­ளைத் தொடங்­கிய நூர் சியாஃபி அக­மது அவற்றை மோச­டிக்­கா­ரர்­கள் பயன்­ப­டுத்த ஏற்­பாடு செய்­தார்.

பின்­னர் 2021ஆம் ஆண்டு மே மாதம் இங்­கி­ருந்து தப்பி இந்­தோ­னீ­சி­யா­வின் பாத்­தா­மிற்கு சட்­ட­விரோ­த­மா­கப் பட­கில் சென்­றார்.

இவ்­வாண்டு ஜன­வரி 11ஆம் தேதி பாத்­தாம் அதி­கா­ரி­க­ளி­டம் சர­ண­டைந்த அவ­ருக்கு சட்­ட­விரோதமாக நாட்­டில் நுழைந்­த­தன் பொருட்டு இந்­தோ­னீ­சி­யா­வில் மூன்று மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அதன் பிறகு சிங்­கப்­பூர் திரும்­பிய நூர், ஓசி­பிசி வங்­கியை ஏமாற்­றிய சதித் திட்­டத்­தில் பங்கு வகித்­தது, சென்ற ஆண்டு மே 2ஆம் தேதி முதல் இவ்­வாண்டு ஜன­வரி 10ஆம் தேதி வரை தேசிய சேவைக்கு செல்­லத் தவ­றி­யது ஆகிய குற்­றங்­களை நேற்று நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார்.

முன்­ன­தாக கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கால­கட்­டத்­தில் சமூக ஒன்­று­கூ­ட­லுக்கு விதிக்­கப்­பட்ட தடையை மீறி­ய­தன் தொடர்­பில் 2020ஆம் ஆண்டு டிசம்­பர் 29ஆம் தேதி நூருக்கு நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு விதிக்­கப்­பட்­டது.

அவர் மீண்­டும் அதே தவற்­றைச் செய்­த­தால் நன்­ன­டத்தை கண்­காணிப்பு ரத்து செய்­யப்­பட்டு, சீர்­தி­ருத்­தப் பயிற்­சி­யைக் குறைந்­தது ஓராண்­டுக்கு மேற்­கொள்­ளும்­படி உத்­த­ர­வி­டப்­பட்­டது.

ஒரு நிலை­யத்­தில் தடுத்து வைக்­கப்­பட்ட நூர், உடற்­ப­யிற்சி செய்­தல், மன­நல ஆலோ­சனை பெறு­தல் ஆகி­ய­வற்­றில் ஈடு­பட நேர்ந்­தது.

உரி­மம் இன்­றிச் செயல்­பட்ட கடன்­மு­த­லை­யி­டம் 2020, 2021ஆம் ஆண்­டு­களில் கடன் வாங்­கி­னார் நூர்.

வாங்­கிய பணத்­தைத் திருப்­பிச் செலுத்த இய­லா­மல் அவர்­கள் கூறி­ய­படி, தனது பெய­ரில் ஓசி­பிசி வங்­கிக் கணக்கு தொடங்கி அதனை கடன்மு­தலை பயன்­ப­டுத்­திக்­கொள்ள ஏற்­பாடு செய்­தார்.

இந்­தக் கணக்­கில் முத­லீட்டு மோசடி மூலம் பெறப்­பட்ட $31,500 பணம் செலுத்­தப்­பட்­ட­தும் மூன்­றாம் தரப்­பி­னர் வங்­கிக் கணக்கை நிர்­வ­கிப்­ப­தும் கண்­ட­றி­யப்­பட்­டது.

சிங்­கப்­பூர் திரும்­பி­ய­தில் இருந்து நூர் சீர்­தி­ருத்­தப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­பட்­டது.

மேலும் ஒரு­முறை சீர்­தி­ருத்­தப் பயிற்­சிக்கு அவ­ரது தகுதி குறித்து மதிப்­பீடு செய்­யும்­படி நீதி­மன்­றம் நேற்று உத்­த­ர­விட்­டுள்­ளது.

வழக்கு அடுத்த மாதம் 18ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.