முதலாளியின் 'ஏடிஎம்' அட்டையைத் திருடிய பணிப்பெண்ணுக்குச் சிறை

முதலாளியின் 'ஏடிஎம்' அட்டையைத் திருடிய பணிப்பெண்ணுக்குச் சிறை

2 mins read
0f8f0007-ff11-459d-8e2b-68c090107bc7
-

வீட்­டைச் சுத்­தப்­ப­டுத்­தி­ய­போது முத­லா­ளி­யின் 'ஏடி­எம்' அட்­டை­யைத் திருடி, அதை 'கூரி­யர்' அஞ்­ச­லில் தோழிக்கு அனுப்­பி­னார் 29 வயது ஹுரியா.

பின்னர் தோழி மூலம் முத­லா­ளி­யின் சேமிப்­புக் கணக்­கில் இருந்து $14,350 பணத்தை எடுத்­துக்­கொண்ட குற்­றத்தை நேற்று அவர் நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார்.

திருட்­டுச் செய­லைத் தூண்­டி­ய­தாக சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை ஹூரியா ஒப்­புக்­கொண்­டதை அடுத்து அவ­ருக்கு ஆறு மாதச் சிறை­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

தண்­டனை விதிக்­கும்­போது மேலும் மூன்று குற்­றச்­சாட்­டு­களும் கருத்­தில் கொள்­ளப்­பட்­டன.

இந்­தோ­னீ­சி­ய­ரான ஹுரியா, 75 வயது மூதாட்­டி­யின் இல்­லத்­தில் பணிப்­பெண்­ணாக வேலை பார்த்­தார். மூதாட்­டி­யின் கண­வ­ரும் அங்கு வசித்­த­தா­கக் கூறப்­பட்­டது.

சென்ற ஆண்டு அக்­டோ­பர் மாதம் முதல் அந்த வீட்­டில் வேலை­பார்த்த அவர் மாதச் சம்­ப­ள­மாக $635 பெற்­றுக்­கொண்­டார்.

முத­லா­ளி­யும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரும் தன்னை நல்­ல­மு­றை­யில் நடத்­தி­ய­தாக நீதி­மன்­றத்­தில் ஹுரியா தெரி­வித்­தார்.

இந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் முத­லாளி தனது கைப்­பை­யில் வங்கி அட்­டை­களை வைத்­தி­ருப்­ப­தைக் கண்­டு­பி­டித்­தார் ஹுரியா. அவற்­றில் யுஓபி வங்­கி­யின் 'ஏடி­எம்' அட்­டை­யும் அடங்­கும்.

வங்கி அட்­டை­க­ளுக்­கான மறைச்­சொற்­கள் எழு­தப்­பட்ட குறிப்­பேட்­டை­யும் மூதாட்டி கைப்­பை­யில் வைத்­தி­ருப்­பதை அவர் பார்த்­தார்.

எனவே யுஓபி வங்கி அட்­டை­யைத் திரு­டிய ஹுரியா அதனை 'கூரி­யர்' அஞ்­சல் சேவை மூலம் ஃபுஜிரா ஃபெப்ரி ஜம­யாந்தி எனும் பெய­ரு­டைய தனது தோழிக்கு அனுப்­பி­னார்.

பின்­னர் செப்­டம்­பர் 15ஆம் தேதிக்­கும் 19ஆம் தேதிக்­கும் இடை­யில் அந்த அட்­டை­யைப் பயன்­ப­டுத்தி $14,350 பணம் எடுக்­கும்­படி தோழி­யைக் கேட்­டுக்­கொண்­டார்.

தனது பிஓ­எஸ்பி வங்­கிக் கணக்­கில் இருந்து 3,000 வெள்ளி அனு­ம­தி­யின்றி எடுக்­கப்­பட்­ட­தாக அக்­டோ­பர் மாதம் முத­லாளி காவல்­து­றை­யில் புகா­ர­ளித்­தார்.

ஹுரி­யா­விற்கு தண்­டனை விதிக்­கும்­போது இந்­தக் குற்­றச்­சாட்­டும் கருத்­தில் கொள்­ளப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.

திருட்­டுக் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் மூன்­றாண்டு வரை­யி­லான சிறைத்­தண்­ட­னையோ அப­ரா­தமோ இரண்­டுமோ விதிக்­கப்­ப­ட­லாம்.