தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூவருக்கு உச்ச தேசிய விருது

1 mins read
d3e94f82-c701-4f67-b334-7442352e1e15
-
multi-img1 of 3

சிங்­கப்­பூ­ரின் மருத்­து­வச் சேவை­கள் இயக்­கு­ந­ரான இணைப் பேரா­சி­ரி­யர் கென்­னத் மாக், உள்­துறை அமைச்­சின் நிரந்­த­ரச் செய­லா­ளர் பாங் கின் கியோங், பிஎஸ்ஏ இன்­டர்­நே­ஷ­னல் குழு­மத்­தின் தலைமை நிர்­வாகி டான் சோங் மெங் ஆகி­யோ­ருக்கு உய­ரிய விருது வழங்­கப்­ப­டு­கிறது. கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கையாள பெரும்­பங்கு ஆற்­றி­ய­தைத் தொடர்ந்து மூவ­ருக்­கும் அங்­கீ­கா­ரம் வழங்க இவர்­களுக்கு கொவிட்-19 தொடர்பில் ஆக உய­ரிய தேசிய விரு­தான மெச்­சத்­தக்க சேவை விருது வழங்­கப்­ப­டு­கிறது.

கிரு­மிப் பர­வ­லைக் கையாள அமைக்­கப்­பட்ட அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் ஆலோ­ச­க­ரா­கப் பணி­யாற்­றி­ய­தற்­குப் பேரா­சி­ரி­யர் மாக் இந்த விரு­தைப் பெறு­கி­றார். கிரு­மிப் பர­வலை முறி­ய­டிக்­கத் தேவை­யான வழி­மு­றை­களை வரைய இவர் அர­சாங்க அமைப்­பு­க­ளுக்கு உத­வி­னார்.

கொவிட்-19 கிருமி தலை­தூக்­கி­ய­தற்கு சிறிது காலத்­திற்கு முன்­னர்­தான் பேராசிரியர் மாக் மூத்த மருத்­துவ ஆலோ­ச­க­ராக நிய­மிக்­கப்­பட்­டார்.

கிரு­மிப் பர­வல் நெருக்­க­டி­யைச் சமா­ளிக்க அர­சாங்க, தனி­யார் அமைப்­பு­கள் மட்­டு­மின்றி சமூக அமைப்­பு­க­ளை­யும் ஒன்­றா­கச் செயல்­பட வைத்­த­தற்­குத் திரு பாங் கின் கியோங் கௌர­விக்­கப்­ப­டு­வ­தா­கப் பிர­த­மர் அலு­வ­ல­கம் குறிப்­பிட்­டது.

கிரு­மிப் பர­வ­லைக் கையா­ளும் அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­கு­ழு­விற்­குப் பரிந்­து­ரை­களை வழங்க அமைக்கப்பட்ட 'ஹோம்­ஃபி­ரண்ட் கிரை­சிஸ் எக்­சிக்­கி­யூட்­டிவ்' குழு­விற்­குத் திரு பாங் தலைமை தாங்­கி­னார்.

கொள்­ளை­நோய்ப் பர­வல் காலத்­தின்­போது உல­க­ள­வில் விநி­யோ­கச் சங்­கிலி பாதிக்­கப்­பட்­டது. அப்­போது சிங்­கப்­பூ­ருக்­குத் தொடர்ந்து அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் கிடைப்­பதை உறு­தி­செய்­த­தற்­குத் திரு டான் சோங் மெங் அங்­கீ­கா­ரம் பெறு­கி­றார்.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலைக் கையாள பெரும்பங்காற்றியோர்