70 பள்ளிகளுக்குப் புதிய முதல்வர்கள்

70 பள்ளிகளுக்குப் புதிய முதல்வர்கள்

1 mins read
fa550785-eb46-40a8-86d4-b44ce3c90739
-

ஆண்­டு­தோ­றும் சிங்­கப்­பூ­ரின் கல்வி அமைச்சு பள்ளி முதல்­வர்­களை மாற்­றும், புதிய முதல்­வர்­களை நிய­மிக்­கும். அந்த வகை­யில் அடுத்த ஆண்டு 70 முதல்­வர்­கள் வேறு பள்­ளி­க­ளுக்கு நிய­மிக்­கப்­பட்டுள்­ள­னர்.

18 ஆண்­டு­களில் முதன்­மு­றை­யாக இத்­தனை பள்­ளி­க­ளுக்­குப் புதிய முதல்­வர்­கள் நிய­மிக்­கப்­படுகின்றனர்.

"முந்தைய ஆண்­டு­களில் பதி­வா­ன­தைக் காட்­டி­லும் இம்­முறை கூடு­த­லான பள்ளி முதல்­வர்­கள் ஓய்­வு­பெ­று­வதே இதற்­குக் கார­ணம்," என்று கல்வி அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார். ஆண்­டு­தோ­றும் பொது­வாக 50லிருந்து 70 பள்­ளி­க­ளுக்­குப் புதிய முதல்­வர்­கள் நிய­மிக்­கப்­ப­டு­வர் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

26 பள்­ளி­க­ளுக்­குப் புதி­தா­கப் பணி­யில் ஈடு­படும் முதல்­வர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். ஷங்­­ரிலா ஹோட்­ட­லில் நேற்று நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் ஓய்­வு­பெ­றும் முதல்­வர்­க­ளுக்­கும் மூத்த கல்வி அதி­கா­ரி­க­ளுக்­கும் கல்வி அமைச்சு நன்றி தெரி­வித்­துக்­கொண்­டது.

நிகழ்ச்­சி­யில் கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

ரோசைத் பள்­ளி­யின் முதல்­வராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார் திரு சூரஜ் நாயர்.

கல்வி அமைச்­சின் தொழில்­நுட்­பப் பிரி­வில் தொழில்­நுட்ப முறை­கள் இயக்­கு­ந­ரா­கப் பணி­பு­ரிந்த இவர், தனது புதிய பொறுப்­பி­லும் புத்­தாக்க அம்­சங்­க­ளைச் சேர்க்­கும் இலக்­கு­டன் இருக்­கி­றார்.

"கல்வி அமைச்­சின் தலை­மை­யகத்­தில் நான் பணி­யாற்­றி­யது கற்­ற­லின் வருங்­கா­லத்தை அறிந்து­கொள்ள வகை­செய்­தது. அதன் மூலம் புதிய அம்­சங்­க­ளைச் சோதித்­துப் பார்த்து அவற்­றின் வாயி­லாக அனு­ப­வம் பெற்று சம்­பந்­தப்­பட்ட முறை­களை மேம்­ப­டுத்­து­வது எப்­படி என்­ப­தைக் கற்­றுக்­கொள்­ள­முடிந்­தது," என்­றார் 48 வயது திரு சூரஜ்.