சிங்கப்பூரின் ஆகப் பெரிய வங்கியான டிபிஎஸ் அடுத்த ஆண்டு அதன் தலைமைத்துவத்தில் சில முக்கிய மாற்றங்களை செய்யவுள்ளது. வங்கியின் 'இன்ஸ்டிடியூஷனல் பேங்கிங் ஃபிரேஞ்சைஸ்' எனப்படும் பெரிய அமைப்புகளுக்கு சேவைகள் வழங்கும் பிரிவை மேம்படுத்துவது மாற்றங்கள் செய்யப்படுவதற்கான காரணம்.
டிபிஎஸ்-இல் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான சேவைகள் பிரிவின் தலைவராக இருக்கும் திருவாட்டி ஜாய்ஸ் டீ, நாளை மறுநாள் முதல் சீனாவுக்கான டிபிஎஸ் கிளையின் பெரிய அமைப்புகளுக்கான சேவைகள் பிரிவின் தலைவராகப் பொறுப்பு வகிப்பார்.
தற்போது சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான சேவைகள் பிரிவின் நடுநிலை நிறுவனங்களுக்கான குழுவின் தலைவராக இருக்கும் திரு கோ கார் சியோங், திருவாட்டி டீயின் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். இந்த வட்டாரத்தின் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான வங்கிச் சேவைகளை அவர் கவனிப்பார்.

