2023 வரவுசெலவுத் திட்டம் பிப்ரவரி 14ஆம் தேதி தாக்கல்

2023 வரவுசெலவுத் திட்டம் பிப்ரவரி 14ஆம் தேதி தாக்கல்

2 mins read
c80df78f-9ed6-4ec4-a600-40e6da9b1f3c
-

நாடாளுமன்றத்தில் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் உரை

சிங்­கப்­பூ­ரின் 2023 வர­வு­செ­ல­வுத் திட்­டம் வரும் பிப்­ர­வரி மாதம் 14ஆம் தேதி நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­க­லா­கும்.

துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் திட்­டத்­தைத் தாக்­கல் செய்வார். வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்கை தொலைக்­காட்சி, வானொலியில் நேர­டி­யாக ஒளி, ஒலிபரப்­பப்­படும்.

திட்­டம் தாக்­க­லா­வதை நேர­டி­யாக www.singaporebudget.gov.sg என்ற இணை­யத்­த­ளத்­தில் காண­லாம். நிதி அமைச்­சர் மன்­றத்­தில் உரை நிகழ்த்தி முடித்­த­தும் முழு வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்­கை­யும் சிங்­கப்­பூர் வர­வு­செ­ல­வுத் திட்ட இணை­யத்­த­ளத்­தில் வெளி­யா­கும்.

நிதி அமைச்­சின் ஃபேஸ்புக், டுவிட்­டர் பக்­கங்­களில் முக்­கி­ய­மான வர­வு­செ­ல­வுத் திட்ட அறி­விப்­பு­கள் உட­னுக்­கு­டன் இடம்­பெ­றும்.

ரீச் அமைப்­பின் பட்­ஜெட் 2023 இணை­யத்­த­ளத்­தில் அல்­லது ரீச் அமைப்­பின் ஒலிவழி­களில் பொது­மக்­கள் தங்­கள் கருத்­து­களை­யும் யோச­னை­க­ளை­யும் பகிர்ந்­து­கொள்ள அழைக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

அவர்­கள் 2023 ஜன­வரி 13ஆம் தேதி வரை www.reach.gov.sg/budget2023 என்ற முக­வ­ரி­யில் தங்­கள் யோச­னை­கள், கருத்­து­க­ளைத் தெரி­யப்­ப­டுத்­த­லாம்.

மக்­கள் கழ­கம், அதன் அடித்­தள அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்து பொது­மக்­களை மெய்­நி­கர் ரீதி­யில் ஈடு­ப­டுத்தி கருத்­து­க­ளை­யும் யோசனை­க­ளை­யும் திரட்­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளை­யும் நிதி அமைச்சு செய்து இருக்­கிறது.

ஆண்­டு­தோ­றும் வர­வு­செ­ல­வுத் திட்ட நடை­முறை, ஏப்­ர­லில் நிதி ஆண்டு தொடங்­கும்­போது தொடங்கிவிடும்.

ஆண்டு முழு­வ­தும் நிதி அமைச்­சுக்­குள்­ளும் இதர அமைப்­பு­களும் பல­வற்­றை­யும் விவா­திக்­கும்.

பிறகு அந்த விவா­திப்­பு­கள் இணை­யம், இதர வழி­களில் பொது­மக்­கள் கலந்து ஆலோ­சிக்க திறந்து­வி­டப்­படும். வர­வு­செ­ல­வுத் திட்­டம் தாக்­க­லா­கும்போது அமைச்­சு­களுக்­கான நிதி ஒதுக்­கீட்டு மசோ­தா­வும் தாக்­க­லா­கும்.

மன்­றம் வரவு­செ­லவுத் திட்­டத்தை விவா­திக்­கும். உறுப்­பி­னர்­களுக்குப் பதி­ல­ளித்து நிதி அமைச்­சர் விவா­தத்தை முடித்துவைத்து உரை­யாற்­று­வார். பிறகு ஒவ்­வொரு அமைச்­சுக்­கான திட்­டங்­களை நாடாளு­மன்­றம் பரி­சீ­லிக்­கும்.

அது முடிந்­த­தும் நிதி அமைச்­சர் நிதி ஒதுக்­கீட்டு மசோ­தாவை இரண்­டா­வது, மூன்­றா­வது வாசிப்­புக்­குத் தாக்­கல் செய்­வார். அதன்­பே­ரில் வாக்­கெ­டுப்பு நடக்­கும்.

மசோ­தா­விற்கு அதி­பர் சம்­ம­தம் வழங்­கி­னால் அது நிதி ஒதுக்­கீட்டுச் சட்­ட­மாக நடப்­புக்கு வரும்.

அந்­தச் சட்­டம், வரும் நிதி ஆண்­டில் அர­சாங்­கத்­தின் செல­வினத்தைக் கட்­டுப்­ப­டுத்­தும்.