'வேலையிட விபத்துகளைத் தவிர்க்க மேலும் பாடுபட வேண்டும்'

'வேலையிட விபத்துகளைத் தவிர்க்க மேலும் பாடுபட வேண்டும்'

2 mins read
d7a78027-3a05-4b49-afd2-1ab060899d6d
-

ரைஃபிள் ரேஞ்ச் ரோட்­டில் செவ்­வாய்க்­கி­ழமை பாரந்­தூக்­கி­யில் இருந்து இயந்­தி­ரம் சரிந்து விழுந்­த­தில் அதில் சிக்கி லை சியோவ், 31, என்ற ஆட­வர் மாண்­டு­விட்­டார்.

அவ­ருக்கு அடுத்த ஆண்டு செப்­டம்­ப­ரில் திரு­ம­ணம் நடக்­க­விருந்­தது. திரு­ம­ணம் முடிந்­த­தும் கிம் மோவில் புதிய பிடிஓ வீட்­டில் அவர் குடி­யே­ற­வி­ருந்­தார்.

அவர் ஆர்­சி­எம் ரிசோர்­சர்ஸ் என்ற ஊழி­யர் விநி­யோக நிறு­வனத்­தில் வேலை பார்த்­தார்.

கிம் மோவில் அந்த ஆட­வ­ரின் ஈமச்­சடங்­கு­கள் நேற்று நடந்­தன. அதில் அவ­ரு­டைய உற­வி­னர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் 62 வயது ஆட­வர் ஒரு­வர் கைதாகி இருப்­ப­தாக புதன்­கி­ழமை காவல்­துறை தெரி­வித்­தது.

இந்த ஆண்­டில் திரு லை சியோவ்­வை­யும் சேர்த்து வேலை­யி­டங்­களில் மொத்­தம் 45 பேர் மாண்டு இருக்­கி­றார்­கள்.

வேலை­யிட மர­ணங்­களை முற்­றி­லும் தீவிரமாக அதி­கா­ரி­கள் புலன் விசா­ரணை நடத்த இய­லும் என்று தங்­கள் குடும்­பம் நம்­பு­வ­தாக உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

இங்கு பாது­காப்பு கலா­சா­ரம் பற்­றாக்­கு­றை­யாக இருக்­கிறது என்­பதை ஒப்­புக்­கொள்ள வேண்­டிய நேரம் வந்­தி­ருப்­ப­தாக குறிப்­பிட்ட திரு சியோ­வின் சகோ­த­ரி­யான திரு­வாட்டி ருத் சியோவ், 33, வேலை­யிட விபத்­து­களில் சிக்­கி­வி­டு­வோ­ரின் குடும்­பங்­க­ளுக்கு அதிக ஆத­ரவு தேவை என்றார்.

"விபத்­து­கள் நிக­ழத்­தான் செய்­யும். ஆனால், அது ஏன் நிகழ்ந்­தது என்ற கேள்வி நம் மன­தில் உதிக்க வேண்­டும். அத்­த­கைய விபத்­து­களை ஏன் தவிர்க்க முடி­ய­வில்லை என்­பதை தெரிந்­து­கொள்ள நாம் விரும்ப வேண்­டும்.

"கண் மூடி கண் திறப்­ப­தற்­குள் இத்­த­கைய விபத்­து­கள் நிகழ்ந்­து­வி­டு­கின்­றன. வேலை­யி­டப் பாது­காப்பு பற்றி ஒவ்­வொ­ரு­வ­ரும் மேலும் புரிந்­து­ணர்­வு­டன் திகழ வேண்­டும் என்­பதை உறு­திப்­ப­டுத்­தவே நாம் விரும்­பு­கி­றோம்," என்­று அவர் தெரி வித்தார்.