950,000 குடும்பங்களுக்கு பயனீட்டுக் கட்டணக் கழிவு

950,000 குடும்பங்களுக்கு பயனீட்டுக் கட்டணக் கழிவு

2 mins read
e2c32707-90f9-473d-9609-7f212104b2e7
-

ஜிஎஸ்டி, இதர செலவுகளைச் சமாளிக்க ஜனவரி முதல் உதவிக்கரம்

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்கு­மாடி வீடு­களில் வசிக்­கின்ற சுமார் 950,000 குடும்­பங்­க­ளுக்கு ஜன­வரி மாதம் முதல் பய­னீட்­டுக் கட்­ட­ணக் கழி­வு­கள் கிடைக்­கும்.

வாழ்க்­கைச் செலவு அதி­க­ரித்து இருப்­ப­தைச் சமா­ளிக்க அர­சாங்­கம் உத­விக்கரம் நீட்­டி­வ­ரு­கிறது.

அதன் ஒரு பகு­தி­யாக குடும்­பத்­திற்கு $190 வரை கட்­ட­ணக் கழிவு கிடைக்­கும். ஜிஎஸ்டி வரி, இதர வாழ்க்­கைச் செல­வு­களை ஈடு­கட்ட இதை குடும்­பங்­கள் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

இந்­தக் கழிவு, ஜிஎஸ்­டி­ வரி பற்­றுச்­சீட்டு, பய­னீட்­டுக் கட்­ட­ணத் தள்­ளு­படி வடி­வில் கிடைக்­கும். கட்­ட­ணக் கழிவு ஒவ்­வொரு நிதி­ஆண்­டி­லும் காலாண்டுதோறும் கொடுக்­கப்­படும். அதா­வது ஏப்­ரல், ஜூலை, அக்­டோ­பர், ஜன­வரி மாதங்­களில் கிடைக்­கும்.

தகுதி பெறு­கின்ற குடும்­பங்­களுக்கு, 2023 மார்ச் மாதம் முடி­வடை­யும் இப்­போ­தைய நிதி­யாண்­டில், வழக்­க­மா­கக் கிடைக்­கக்­கூ­டிய பய­னீட்­டுக் கட்­ட­ணத் தள்­ளு­ப­டி­யைப் போல் இரண்டு மடங்கு கழிவு கிடைக்­கும்.

வீவக ஓரறை, ஈரறை வீடு­களில் வசிக்­கும் குடும்­பங்­கள் ஆக அதி­க­மாக $190 கட்­ட­ணக் கழி­வைப் பெறும். இது, மூவறை வீடு­களில் வசிப்­போ­ருக்கு $170 ஆக இருக்­கும் என்று நிதி அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

வீவக நான்­கறை வீட்­டில் வசிக்கும் தகு­தி­பெ­றும் சிங்­கப்­பூரர்­கள் $150 பெறு­வார்­கள். ஐந்­தறை வீட்­டில் வசிப்­போர் $130 கழி­வும் எக்சகி­யூட்­டிவ் அல்­லது பல­ தலைமுறை வீட்­டில் வசிப்­போர் $110 கழி­வும் பெறு­வர்.

ஓரறை, ஈரறை வீட்­டில் வசிக்கும் சரா­சரி குடும்­பங்களைப் பொறுத்­த­வரை, அவற்­றுக்­குக் கிடைக்­கும் கட்­ட­ணக் கழி­வைக்­கொண்டு சுமார் 10 மாதக் காலத்­திற்­கான பய­னீட்டுச் செலவை ஈடு செய்­து­வி­ட­லாம்.

மூவறை, நாலறை வீடு­களில் வசிப்­போர் நான்கு முதல் ஆறு மாதக் காலத்­திற்­கான கட்­ட­ணத்­தைச் சமா­ளித்­து­வி­ட­லாம்.

பய­னீட்­டுக் கட்­ட­ணக் கழி­வு­கள் எஸ்பி சர்­வீ­சஸ் நிறு­வ­னம் நிர்­வகிக்கும் பய­னீட்­டுக் கணக்­கு­களில் நேர­டி­யாக வரவு வைக்­கப்­பட்­டு­விடும்.

ஓரறை முதல் ஐந்­தறை வரைப்­பட்ட வீடு­களில் வசிக்­கும் குடும்­பங்­க­ளுக்குச் சேவை, பய­னீட்­டுக் கட்­ட­ணங்­களில் 0.5 மாத ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்­டுக் கழிவு கொடுக்­கப்­படும்.

இது, நகர மன்­றங்­கள் நிர்­வகிக்­கும் சேவை, பரா­ம­ரிப்­புக் கட்­டண கணக்­கு­களில் ஜன­வ­ரி­யில் வரவு வைக்­கப்­பட்­டு­வி­டும்.

ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்­டுத் திட்­டத்தை நிரந்­தர உத­வித் திட்­ட­மாக அர­சாங்­கம் அறி­வித்து இருக்­கிறது. அதோடு மட்­டு­மின்றி உத்­த­ர­வாத உத­வித் திட்­ட­மும் நடப்­பில் உள்ளது.

இதன் ஒரு பகு­தி­யா­கத்­தான் பய­னீட்டு, பரா­ம­ரிப்­புக் கட்­டணக் கழி­வு­கள் கொடுக்­கப்­ப­டு­கின்­றன.

அர­சாங்­கத்­தின் உத்­த­ர­வாத உத­வித் திட்­டம் 2020ல் முதன்­முதலாக அறி­விக்­கப்­பட்­டது. இந்த உத­வித் திட்­டத்­தில் கடந்த நவம்பர் மாதம் $1.4 பில்­லி­யன் தொகை சேர்க்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் வரும் ஜன­வரி மாதம் முதல் ஜிஎஸ்டி வரி 7%லிருந்து 8% ஆக உயர்­கிறது. இத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­களைச் சமா­ளிக்க சிங்­கப்­பூ­ரர்­களுக்கு உத­வும் வகை­யில் அந்­தத் தொகை அதி­க­ரிக்­கப்­பட்டுள்ளது.

உத்­த­ர­வாத உத­வித் திட்­டத்­தில் மொத்­தம் $8 பில்­லி­யன் போடப்­பட்டு உள்­ளது.