முதல் சுற்றுச்சூழல் அலுவலகம் அமைகிறது; அதிகாரி நியமனம்

முதல் சுற்றுச்சூழல் அலுவலகம் அமைகிறது; அதிகாரி நியமனம்

1 mins read
5b7ba02d-7fb2-41fa-a91d-e3e68c1706d0
-

பரு­வ­நிலை மாற்­றங்­க­ளைச் சமாளிக்க அர­சாங்­கம் எடுத்­து­வரும் முயற்­சி­களை முன்­னெடுக்கத் தோதாக சுற்­றுச்­சூ­ழல் அதி­காரி அலு­வ­ல­கம் என்ற அமைப்பு முதன்முத­லாக அமைவதாக நீடித்த நிலைத்­தன்மை, சுற்றுப்­புற அமைச்சு அறி­வித்­துள்­ளது.

அந்த அலு­வ­ல­கம், அடுத்த பத்து ஆண்டுகளுக்­கான திட்­ட­வட்­ட­மான சுற்­றுச்­சூழல் இலக்­கு­களுக்கு வடி­வம் கொடுக்­கும்.

ஐநா அமைப்பு தீட்டி இருக்­கும் 2030 சுற்­றுக்­சூ­ழல் மேம்­பாட்டு செயல்­திட்­டத்­தில், பாரிஸ் உடன்­பாட்­டில் சிங்­கப்­பூர் கொண்­டுள்ள கடப்­பாட்டை அது பலப்­ப­டுத்­தும். அறவே கரி­மக் கழிவு இல்­லாத நிலை­யைச் சாதிக்க அது சிங்­கப்­பூரை தயார்­ப­டுத்­தும்.

அர­சாங்க முத­லா­வது சுற்­றுச்­சூ­ழல் அதி­கா­ரி­யாக லிம் துவாங் லியாங் 2023 ஜன­வரி 1ஆம் தேதி முதல் பொறுப்பு ஏற்­பார். அவர், நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சின் துணைச் செய­லா­ள­ரா­க­வும் (சிறப்­புப் பணி­கள்) நிய­மிக்­கப்­ப­டு­வார்.

திரு லிம், இப்­போது இந்த அமைச்­சில் அறி­வி­யல் தொழில்­நுட்பத் தலைமை அதி­காரியாக இருக்­கி­றார். இந்­தப் பத­வி­யைக் கைவிட்டு­ திரு லிம் புதிய பொறுப்பை ஏற்­பார்.

அர­சாங்க சுற்­றுச்­சூ­ழல் அதிகாரி அலுவல­க தலை­வர் என்ற முறை­யில் திரு லிம் சிங்­கப்­பூ­ரின் பசுமைத் திட்­டம் 2030 போன்ற சுற்­று­ச்சூழல் திட்­டங்­களை முன்னெடுப்­பார் என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது.