சொத்துச் சண்டை: பாட்டி, பேரன் இருவரின் வழக்கும் தள்ளுபடி

சொத்துச் சண்டை: பாட்டி, பேரன் இருவரின் வழக்கும் தள்ளுபடி

4 mins read
e4dea421-6207-4b30-8501-ae69671489f0
-

திரு­வாட்டி ராஜ­லிங்­கம் லெட்­சுமி, 82, என்­ப­வ­ரின் புதல்­வர் திரு ஜெகன்­நா­தன் ராஜேந்­தி­ரன் திரு­ம­ணம் புரிந்து மனைவி­ யுடன் சேர்ந்து தஞ்­சோங் பகா­ரில் வீடமைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்­கு­மாடி வீடு ஒன்றை வாங்கி அதில் வசித்து வந்­தார்.

அத்­தம்­ப­திக்கு சங்­கர் என்ற ஆண் மகன் பிறந்­தார். சங்­கர் தவ­ழும் குழந்­தை­யாக இருந்­த­போது கண­வ­ரி­டம் கோபித்துக்­கொண்டு சங்­க­ரின் தாயார், குழந்­தையைத் தூக்­கிக்கொண்டு வீட்­டை­விட்டு வெளி­யே­றி­விட்­டார்.

பிறகு மண­வி­லக்கு நடை­மு­றை­கள் பூர்த்­தி­யா­யின. அதை­ய­டுத்து தஞ்­சோங் பகார் வீடு திரு ஜெக­ன்நா­த­னுக்கு சொந்­த­மா­னது என்று 2005 ஏப்­ர­லில் முடி­வா­னது.

இப்­படி இருக்­கை­யில், 2019 ஜூலை 30ஆம் தேதி இரவு நேரத்­தில் திரு ஜெகன்­நா­தன் போக்­கு­வ­ரத்து விபத்து ஒன்­றில் சிக்­கி­விட்­டார். அடுத்த நாள் அதி­காலையில் மருத்­து­வ­ம­னை­யில் அவர் மா­ண்டார். உயில் எதையும் அவர் எழுதவில்லை.

திரு சங்­க­ரு­டன் 2019 ஆகஸ்ட் மாத தொடக்­கத்­தில் தொடர்­பு­கொண்ட அவரின் உற­வி­னர் ஒரு­வர், திரு சங்­க­ரின் தந்தை மர­ண­ம­டைந்­து­விட்­ட­தாக மரண விளம்­பரம் வெளி­யாகி உள்ளது என்று கூறி­னார்.

அதை­ய­டுத்து தன் தந்­தை­யின் சொத்து­களை நிர்­வ­கிக்­கும் உரி­மையை தனக்கே கொடுக்க வேண்­டும் என்று கோரி திரு சங்­கர் மனு செய்­தார்.

$450,000 மதிப்புள்ள தஞ்­சோங் பகார் வீடு, சுமார் $120,800 பணத்துடன் கூடிய பிஓ­எஸ்பி கணக்கு, $55,000 கூடிய ஓசிபிசி கணக்கு ஆகி­யவை திரு ஜெகன்­நா­தனின் சொத்­து­களில் அடங்­கும்.

இப்­படி இருக்­கை­யில், திரு­வாட்டி ராஜ­லிங்­கம் லெட்­சுமி, தன்­ பேர­னுக்கு எதி­ராக நீதி­மன்றத்­தில் வழக்­குத் தொடுத்­தார்.

தன்­ மக­னான ஜெகன்­நா­த­னின் தஞ்­சோங் பகார் வீடு தனக்­குத்­தான் கிடைக்க வேண்­டும் என்று அந்த முதிய மாது கோரிக்கை விடுத்­தார்.

அந்த மாதுக்கு ஜூரோங் ஈஸ்ட்டில் அடுக்கு­மாடி வீடு ஒன்று இருக்­கிறது. அந்த வீட்­டில் தன்­ இதர பிள்­ளை­களை தங்க அந்த மாது அனு­ம­தித்­தார். அந்த வீடு தனது மக­ளுக்குச் சேர வேண்­டும் என்று உயி­லும் எழுதி வைத்­து­விட்­டார்.

இவற்­றைச் செய்­து­விட்டு அந்த மாது தன்­ மக­னின் தஞ்­சோங் பகார் வீட்­டில் வசித்து வந்­தார்.

"என்­னு­டைய மகன் ஜெகன்­நா­தன் 2005லிருந்து 2019 வரை திரும்­பத் திரும்ப பல தடவை என்­னி­டம் சொல்லி இருக்­கிறார். உங்­க­ளுக்கு முன் நான் இறந்­து­விட்­டால் இந்த வீடு உங்­க­ளுக்­குத்­தான் என்று என்­னி­டம் என் மகன் அடிக்­கடி கூறி இருக்­கி­றார்.

"என் மக­னின் வீட்டை என் வீடு போல் நினைத்து அதைப் புதுப்­பித்து மேம்­ப­டுத்த $25,000 செல­விட்டு இருக்­கி­றேன்.

"என் மகனை நான் கவ­னித்­துக் கொண்­டேன். குடும்பச் செல­வு­க­ளை­யும் நான் பார்த்­துக்கொண்­டேன். வீட்டு வேலை­ க­ளை­யும் செய்து வந்­தேன்.

"தஞ்­சோங் பகார் வீடு எனக்­குத்­தான் என்று என்னுடைய மகன் என்­னி­டம் திரும்பத் திரும்ப சொன்­னதை நம்பி ஜூரோங் ஈஸ்ட் வீட்­டை­யும் நடை­மு­றை­யில் கைவிட்டு­விட்­டேன்.

"ஆகை­யால், தஞ்­சோங் பகார் வீடு எனக்­குத்­தான் சேர வேண்­டும்," என்று திரு­வாட்டி ராஜ­லிங்­கம் லெட்­சுமி வழக்கு விசா­ர­ணை­யின்போது நீதி­மன்­றத்­தில் முறை­ யிட்­டார்.

திரு சங்­கர் ராஜேந்திரனுக்கு, 26, எதிராக 2021ல் தொடுத்த வழக்கில் முதலில் சார்ல்ஸ் இயோ என்ற வழக்­க­றி­ஞரை திருவாட்டி ராஜ­லிங்­கம் லெட்­சுமி நிய­மித்து இருந்­தார்.

ஆனால், அந்த வழக்­க­றி­ஞர் 2022 ஆகஸ்ட்­டில் நாட்­டை­விட்டு வெளி­யே­றி­விட்­டார். அவ­ரு­டன் தொடர்­பு­கொள்ள முடி­ய­வில்லை. அதை­ய­டுத்து வழக்­கில் அந்த முதிய மாதின் சார்­பில் வழக்­கறி­ஞர் ராஜ்­வின் சிங் சாந்து என்­ப­வர் முன்­னிலை­யா­னார்.

திரு­வாட்டி ராஜ­லிங்­கம் லெட்­சுமி இப்­படி முறை­யிட, பேர­னான திரு சங்­கர், தன் பாட்­டியை எதிர்த்து வாங் லியான்­ஷெங் என்ற வழக்­க­றி­ஞரை அமர்த்தி எதிர்­வாதம் புரிந்­தார்.

திரு ஜெகன்­நா­தன், தன் தாயா­ரி­டம் தஞ்­சோங் பகார் வீடு தொடர்­பில் கூறி வந்­ததை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று திரு சங்­கர் தரப்­பில் முன்­னி­லை­யான வழக்­கறி­ஞர் வாதிட்­டார்.

அப்­ப­டியே திரு ஜெகன்­நா­தன் கூறி­யிருந்­தா­லும் அத­னால் திரு­வாட்டி ராஜ­லிங்­கத்­துக்கு எந்த பாதிப்­பும் ஏற்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை என்­றா­ர­வர்.

அதோடு மட்­டு­மின்றி, தன்­னு­டைய பாட்டி தன் தந்­தை­யின் வங்­கிக் கணக்கு­களில் இருந்து ஏறக்­கு­றைய $181,000 பணத்தை எடுத்­துக்கொண்­ட­தா­க­வும் திரு சங்­கர் வாதிட்­டார்.

இரு தரப்பு வாதங்­க­ளை­யும் செவி­மடுத்த உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி லீ சியு கின், இரண்டு பேரின் வாதங்­க­ளை­யும் தள்­ளு­படி செய்து­விட்­டார்.

"தஞ்­சோங் பகார் வீட்­டைப் பொறுத்­த­வரை உயில் இல்லா வாரிசு சட்­டத்­தின்­கீழ் அந்த வீட்­டிற்குத் திரு சங்­க­ர்தான் முழு உரி­மை­யா­ளர்.

"அதே­வே­ளை­யில், தன் மக­னின் கணக்­கில் இருந்து பணத்தை எடுத்­த­தன் மூலம் திரு­வாட்டி ராஜ­லிங்­கம் லெட்­சுமி நியா­ய­மற்ற முறை­யில் எந்த வச­தி­யை­யும் பெற்று­வி­ட­வில்லை.

"தஞ்­சோங் பகார் வீட்­டைப் புதுப்­பிக்கவும் பழுது பார்க்­க­வும் $25,000 செல­விட்டு இருப்­ப­தாக திரு­வாட்டி ராஜ­லிங்­கம் லெட்­சுமி கூறு­கி­றார். ஆனால், இதை மெய்­பிக்க போதிய சாட்­சி­யம் இல்லை.

"திரு­வாட்டி ராஜ­லிங்­கம் லெட்­சுமி தன்­ஜூரோங் ஈஸ்ட் வீட்­டில் தன் இதர பிள்ளை­கள் வசிக்க அனு­ம­தித்து அந்த வீட்டை தன்­னு­டைய ஒரு மக­ளுக்கு உயில் எழுதி வைத்து இருக்­கி­றார். இப்­படி செய்­த­தால் மட்­டும் அந்த வீட்டை அந்த மாது கைவிட்டு­விட்­ட­தாக பொருள் ஆகாது.

"திரு­வாட்டி ராஜ­லிங்­கம் லெட்­சுமி தன்­மக­னின் கணக்­கு­களில் இருந்து பணத்தை எடுத்­த­போது திரு ஜெகன்­நா­த­னின் சொத் ­துகளை நிர்­வ­கிப்­ப­வ­ராக திரு சங்­கர் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. ஆகை­யால், பணத்தை எடுக்­கவோ, மறுக்­கவோ திரு சங்­கரு­டைய அனு­மதி அப்போது தேவை­யில்லை," என்று தீர்ப்­பில் நீதி­பதி தெரிவித்தார்.