மக்கள் வாழ்வு மேம்பட பாடுபட்டோம்: பிரித்தம் சிங்

மக்கள் வாழ்வு மேம்பட பாடுபட்டோம்: பிரித்தம் சிங்

1 mins read
8dc8ae73-48ee-402a-913b-93a3bea5a45e
-

நாடா­ளு­மன்­றத்­தில் குரல்­கொடுத்­த­தன் மூலம் சென்ற ஆண்­டில் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வாழ்க்­கையை மேம்­ப­டுத்த பாட்­டா­ளிக் கட்சி பாடு­பட்டு இருக்கிறது என்று அந்­தக் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் பிரித்­தம் சிங் புத்­தாண்­டுச் செய்தி­யில் தெரி­வித்­தார்.

பண­வீக்­கம், அதிக வட்­டி­வி­கி­தம், வாழ்க்­கைச் செலவு அதி­க­ரிப்பு போன்ற அம்­சங்­களை நாடா­ளு­மன்­றத்­தில் கட்சி உறுப்­பி­னர்­கள் எழுப்­பி­ய­தாக திரு சிங் கூறி­னார்.

ஜிஎஸ்டி வரி உயர்வை எதிர்த்­த­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார். சமூ­கங்­க­ளுக்­காக பாட்­டா­ளிக் கட்சி ஏற்­பாடு செய்த பல நிகழ்ச்­சி­க­ளை­யும் தன் செய்­தி­யில் அவர் எடுத்­துக் கூறி­னார்.

சென்ற ஆண்­டில் கட்சி மீது நம்­பிக்கை வைத்து செயல்­பட்ட உறுப்­பி­னர்­கள், நன்­கொ­டை­யா­ளர்­கள், ஆத­ர­வா­ளர்­கள், தொண்­டூ­ழி­யர்­கள், குடி­யி­ருப்­பா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் தம் செய்­தி­யில் திரு சிங் நன்றி கூறினார்.