$600,000 மோசடி: இறுதி குற்றவாளிக்கு ஏழாண்டுச் சிறை, 12 பிரம்படி

1 mins read
647c218c-31e8-41cf-92ab-3451f395b5bc
-

பண­மாற்று வர்த்­தக நிறு­வ­னத்­தின் மேலா­ள­ரி­டம் இருந்து 2014ஆம் ஆண்­டில் $600,000 கொள்ளை அடித்த பிறகு ஒன்­பது பேர் கொண்ட குழு மலே­சி­யா­விற்­குத் தப்­பி­யோ­டி­யது.

அதில் சிவ­ராம் மணி­ய­னும் ஒரு­வர். சென்ற ஆண்டு ஜூலை 6ஆம் தேதி அவர் மலே­சிய அதி­கா­ரி­க­ளால் கைது செய்­யப்­பட்­டார். அந்த 36 வயது மலே­சி­ய­ருக்கு நேற்று ஏழு ஆண்­டுச் சிறைத்­தண்­ட­னை­யு­டன் 12 பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன.

இந்த வழக்­கில் தண்­டனை விதிக்­கப்­பட்ட இறு­திக் குற்­ற­வாளி இவர்.

முன்­ன­தாக, கும்­ப­லா­கக் கொள்ளை அடித்த குற்­றத்தை மாவட்ட நீதி­மன்­றத்­தில் சிவ­ராம் ஒப்­புக்­கொண்­டார். தண்­டனை விதிக்­கும்­போது மேலும் ஒரு குற்­றச்­செ­ய­லும் கருத்­தில் கொள்­ளப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

டச்­சனா என்­ப­வ­ரி­டம் வாங்­கிய 10,000 ரிங்கிட் கட­னைத் திருப்­பிச் செலுத்த இய­லாத நிலையில், சிவ­ராம் அவ­ருக்குக் கொள்­ளை­யில் உடந்­தை­யா­கச் செயல்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.