தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'எஸ்377ஏ' சட்டப்பிரிவு அதிகாரபூர்வமாக அகற்றப்பட்டது

1 mins read
a7dfa5cd-2a68-4313-b2e0-dbaed4adadb9
-

சிங்­கப்­பூ­ரில் ஓரி­னச் சேர்க்­கையை குற்­ற­மாக வகைப்­ப­டுத்­தும் 377ஏ சட்­டப் பிரிவை அகற்­று­வ­தற்கு அதி­பர் ஹலிமா யாக்­கோப் ஒப்­பு­தல் அளித்­துள்­ளார்.

இது தொடர்­பான மசோ­தா­விற்கு அவர் சென்ற மாதம் 27ஆம் தேதி ஒப்­பு­தல் அளித்­தார். அதே நேரத்­தில் திரு­ம­ணத்­துக்­கான வரை­ய­றையை பாது­காக்­கும் வகை­யில் அர­ச­மைப்­புச் சட்­டத்­தில் செய்­யப்­பட்­டுள்ள திருத்­தங்­கள் அம­லுக்கு வந்­துள்­ளன.

அர­சி­த­ழில் நேற்று வெளி­யான அறிக்­கை­கள் இந்­தத் தக­வல்­களைத் தெரி­வித்­தன.

நாடா­ளு­மன்­றம் சென்ற ஆண்டு நவம்­பர் 29ஆம் தேதி இவ்­விரு நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தது. இரண்டு நாள்­களில் மொத்­தம் பத்து மணி நேரத்­துக்கு நீடித்த விவா­தங்­க­ளுக்­குப் பிறகு நாடா­ளு­மன்ற வாக்­கெ­டுப்பு நடை­பெற்­றது.

விவா­தத்­தின் முடி­வில் திரு­ம­ணம் தொடர்­பான விவ­கா­ரங்­களில் முடி­வெ­டுக்­கும் உரிமை நாடா­ளு­மன்­றத்­துக்கே உண்டு என ஒரு­ம­ன­தாக முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

அதற்­குப் பதி­லாக நீதி­மன்­றத்­தின் கைகளில் இதனை விடு­வது அர­ச­மைப்­புச் சட்­டத்­துக்­குப் புறம்­பான வகை­யில் அமை­யும் என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் கூறி­னார்.

ஓரி­னச் சேர்க்­கை­யைக் குற்­றச் செய­லா­கக் கரு­தத் தேவை­யில்லை என்­றும் ஆனால் திரு­ம­ணம் என்­பது ஆணுக்­கும் பெண்­ணுக்­கும் இடை­யி­லா­னதே என்­றும் அர­சாங்­கம் பொது­மக்­க­ளி­டம் நடத்­திய கருத்­த­றி­யும் நட­வ­டிக்­கை­களில் சிங்­கப்­பூ­ரர்­கள் பல­ரும் தெரி­வித்­தி­ருந்­த­னர்.