பறவைகள் பலவகை, நினைவுகள் இன்சுவை: ஜூரோங்கிலிருந்து விடைபெற்றது பறவைப் பூங்கா

2 mins read
67f8480c-6fa8-42cd-8be7-dfa6cb2bd50f
-

ரச்­சனா வேலா­யு­தம்

அரை நூற்­றாண்­டிற்­கும் மேலாக, சுற்­று­லாத் தல­மாக மட்­டு­மின்றி, எண்ணி மகி­ழத்­தக்க வகை­யில் மறக்க முடி­யாத பல அனு­ப­வங்­களை­யும் நினை­வு­க­ளை­யும் அளித்த ஜூரோங் பற­வைப் பூங்கா தனது கத­வு­களை நிரந்­த­ர­மாக மூடிக்­கொண்­டது.

கடந்த 1971ஆம் ஆண்டு ஜன­வரி 3ஆம் தேதி திறக்­கப்­பட்ட ஜூரோங் பற­வைப் பூங்கா நேற்று முன்­தி­னம் தனது 52வது பிறந்­த­நா­ளு­டன் விடை­பெற்­றது.

இத­னை­யொட்டி, பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளுக்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தன. பற­வை­க­ளைக் கொண்டு அங்கு இடம்­பெ­றும் பல்­வேறு நிகழ்ச்­சி­களும் இது­வரை காணாத வகை­யில் வித்­தி­யா­ச­மாக அரங்­கே­றின. அவற்­றைக் காண மக்­கள் திரண்­ட­தால் அரங்­கம் நிரம்பி வழிந்­தது.

பூங்­கா­வின் பிறந்­த­நாளை முன்­னிட்டு, கிளி­கள் மக்­க­ளு­டன் பிறந்­த­நாள் வாழ்த்­துப் பாடலை பாடி­யது எல்­லா­ரை­யும் வியக்க வைத்­தது.

மழை தூறி­ய­போ­தும் மக்­கள் அத­னைப் பொருட்­ப­டுத்­தா­மல், குடை பிடித்­த­படி நிகழ்ச்­சி­களை ரசித்­த­னர். மழை வலுக்­கவே, `பேர்ட்ஸ் ஆஃப் பிரே' நிகழ்ச்சி பாதி­யி­லேயே ரத்து செய்­யப்­பட்டது.

பூங்­காவை மூடப்­போ­வதை நினைத்து கட­வுளே அழு­கி­றார் என்று நகைச்­சு­வை­யு­டன் கூறி­னார் நிகழ்ச்­சியை வழி­ந­டத்­திய திரு சந்­தி­ர­மோ­கன்.

பூங்கா மூடப்­ப­டு­வதை எண்ணி, அதன் பரா­ம­ரிப்­பா­ளர்­கள் அனை­வ­ரும் ஒன்­று­கூடி, கட்­டி­ய­ணைத்து, கண்­ணீர் வடித்­தது வந்­தி­ருந்த சுற்­றுப்­ப­ய­ணி­க­ளை­யும் கண்­க­லங்­கச் செய்­தது.

பற­வைப் பூங்கா அனு­ப­வத்தை மீண்­டும் ஒரு­முறை பெற விரும்பி, குடும்­பத்­தோடு வந்­தி­ருந்­தார் திரு அனுப் ஜோஸ். திரு­ம­ணத்­திற்­கு­முன் அங்கு வந்­தி­ருந்த திரு அனுப், இம்­முறை மனை­வி­யு­ட­னும் ஐந்து மாத கைக்­கு­ழந்­தை­யு­ட­னும் வந்­தி­ருந்­தார்.

தம் வாழ்க்­கை­யின் பல முக்­கியத் தரு­ணங்­களை அப்­பூங்­கா­வு­டன் தொடர்­பு­ப­டுத்­திய அவர், "பூங்கா வேறி­டத்­திற்­குச் சென்­றா­லும் அது அளித்த நினை­வு­களை ஒரு­போ­தும் மறக்­க­மாட்­டேன்," என்­றார்.

ஆண்­டு­தோ­றும் பல­முறை அப்­பூங்­கா­விற்கு வந்­து­செல்­வதை வழக்­க­மா­கக் கொண்டிருந்த குழந்­தை­கள் ஆர்­மா­னும் சாஹி­ரும், பூங்கா இட­மா­றிய பின்­ன­ரும் அங்கு செல்வதைத் தொடர முடிவு­செய்­துள்­ளனர்.

இறுதி நாளில் உள்­ளூர்­வா­சி­கள் மட்­டு­மின்றி, வெளி­நாட்­ட­வர்­களும் பூங்­கா­விற்கு வந்­தி­ருந்­த­னர்.

பற­வைப் பூங்­கா­வைச் சுற்­றிப் பார்க்க வேண்­டும் என்ற தமது நீண்­ட­நாள் ஆசை நிறை­வே­றி­ய­தா­கக் கூறி­னார் இந்­தி­யா­வின் பெங்­க­ளூரு நக­ரைச் சேர்ந்த குமாரி சந்­தனா. ஆயி­னும், மீண்­டும் அங்கு வர­மு­டி­யாது என்­பது அவ­ருக்கு வருத்­த­ம­ளித்­தது.

இரவு 7 மணி­ய­ள­வில் பூங்கா மூடப்­பட்­ட­தும் அதன் ஊழி­யர்­கள், அங்கு வந்­தி­ருந்த மக்­க­ளு­டன் சேர்ந்து, சோகம் கலந்த மகிழ்ச்சி­யு­டன் புகைப்­ப­டம் எடுத்­துக்­கொண்­ட­னர். அவர்­கள் நுழை­வாயி­லில் நின்­ற­படி, இறுதி நாளன்று அங்கு வந்­தி­ருந்­தோ­ருக்கு விடை­கொ­டுத்­தனர்.

ஒரு குடும்­பம்­போல் இணைந்து பணி­யாற்­றிய அவர்­கள், அழ­கான பல நினை­வு­களை அளித்த அவ்­வி­டத்­தை­விட்­டுச் செல்­வதை நினைத்து ஆனந்­தக் கண்­ணீர் உகுத்­த­னர்.

மண்­டா­யில் சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டம், ரிவர் சஃபாரி, நைட் சஃபாரி, புதிய மழைக்­காடு ஆகி­ய­வற்­று­டன் புதிய பற­வைகள் காப்­ப­க­மும் கூடிய விரை­வில் இணை­யவி­ருக்­கிறது.