மகளின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்து தாக்கிய தாயாருக்கு 14 மாதச் சிறைத் தண்டனை

மகளின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்து தாக்கிய தாயாருக்கு 14 மாதச் சிறைத் தண்டனை

2 mins read
dfc0d783-0ef0-40e9-a28a-3bc00692a44a
-

பதின்ம வயது மகள் அடிக்­கடி வெளியே செல்­வ­தில் ஆத்­தி­ர­மடைந்த மாது ஒரு­வர், அந்த மக­ளின் வலது தொடை­யில் கத்­தி­யால் குத்­தி­னார். ஆயு­தம் கொண்டு 15 வயது மக­ளுக்கு வேண்­டு­மென்றே காயம் விளை­வித்த அந்த 40 வயது தாயா­ருக்கு நேற்று 14 மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

நீதி­மன்ற ஆவ­ணங்­க­ளின்­படி, கடந்­தாண்டு ஜூன் 20ஆம் தேதி­யன்று சிறுமி தூங்­கு­வ­தற்­காக தயா­ரா­கிக் கொண்­டி­ருந்­த­தா­க­வும் வீட்­டில் மது அருந்­திக்­கொண்­டி­ருந்த சிறு­மி­யின் தாயார், திடீ­ரென்று சிறு­மி­யைத் திட்­டத் தொடங்­கி­ய­தா­க­வும் அறி­யப்­படு­கிறது. அதை­ய­டுத்து, சிறுமி கொல்­லப்­பட வேண்­டி­ய­வரா என்று மாது தன் 21 வயது மூத்த மகளை நோக்­கிக் கேட்­டி­ருந்­த­தாக அறி­யப்­ப­டு­கிறது.

தாயா­ரின் சினம் தன்­பக்­கம் திரும்­பி­வி­டும் என்று அஞ்சி மூத்த மகள் பதி­ல­ளிக்­க­வில்லை.

பின்­னர், சமை­ய­ல­றைக்­குச் சென்ற அந்த மாது, ஒரு கத்­தியை எடுத்­துக்­கொண்டு சிறுமி­யின் அறைக்­குச் சென்­றார்.

சிறு­மி­யின் வலது தொடைப் பகு­தி­யில் கத்­தி­யால் குத்­தி­ய­தில் ரத்­தம் கசி­யத் தொடங்­கி­ய­தாக அர­சுத்­த­ரப்பு வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார். தாயா­ரின் தாக்­கு­த­லைத் தடுக்க முயன்­ற­தில் சிறு­மி­யின் வலது கையில் வெட்­டுக் காயம் ஒன்று ஏற்­பட்­ட­தா­க­வும் கூறப்­படு­கிறது.

மகள் வெளியே செல்­வ­தைத் தவிர்க்க, மாது தன் மக­ளைத் தாக்­கி­ய­தாக ஒப்­புக்­கொண்­டது குறித்து அர­சுத்­த­ரப்பு குறிப்­பிட்­டது. பின்­னி­ரவு 3.20 மணி­ய­ள­வில் காவ­லர்­க­ளு­டன் தொடர்­பு­கொண்ட அந்த மாது, நடந்­ததை எல்­லாம் கூறி­விட்­டார்.

கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட சிறுமி, ஜூன் 20 முதல் ஜூலை 1 முதல் சிகிச்சை பெற்­று­வந்­தார். பின்­னர், உற­வி­னர் பரா­ம­ரிப்­பில் வீட்­டுக்கு அனுப்­பப்­பட்­டார்.