ஜனவரி 12ல் 'ஓ' நிலைத்தேர்வு முடிவுகள்

1 mins read
105fdd61-23da-4fbb-bb3b-4efea478999d
-

2022 சிங்­கப்­பூர் பொதுச் சான்­றி­தழ் சாதா­ரண நிலைத் தேர்வு முடிவு முடி­வு­கள் வரும் ஜன­வரி 12ஆம் வெளி­யி­டப்­ப­டு­கிறது.

மாண­வர்­கள், தேர்வு முடி­வு­களை தங்­க­ளு­டைய உயர்­நி­லைப்­பள்­ளி­யில் பிற்­ப­கல் 2 மணிக்கு கிடைக்­கப்­பெ­ற­லாம் என்று கல்வி அமைச்சு நேற்று அறி­வித்­தது. அது­கு­றித்த மேல் விவ­ரங்­களை மாண­வர்­கள் பள்­ளி­யில் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் அல்­லது உடல்­நிலை பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தங்­கள் தேர்­வு­மு­டி­வு­களை வாங்க பள்­ளிக்­குச் செல்­லக்­கூ­டாது. மாறாக, 12ஆம் தேதி பிற்­ப­கல் 2.45 மணி­யில் இருந்து சிங்­கப்­பூர் தேர்வு மதிப்­பீட்­டுக் கழ­கத்­தின் இணை­யப்­பக்­கத்­தில் அவர்­கள் தங்­க­ளது முடி­வு­க­ளைப் பார்க்­க­லாம். சிங்­பாஸ் கணக்கு வைத்­தி­ருக்­கும் மாண­வர்­கள், இந்த மாதம் 12ஆம் தேதி­யில் இருந்து 26ஆம் தேதி­வரை, அந்த இணை­யப்­பக்­கத்­திற்­குச் சென்று, முடி­வு­க­ளைப் பார்த்­துக்­கொள்­ள­லாம்.

உயர்­நி­லைப் பள்­ளி­க­ளின் அனைத்­து­லக மாண­வர்­க­ளுக்கு, கணினி உரு­வாக்­கிய பய­னர் பெயர் அடங்­கிய மின்­ம­டல் வரும் 9ஆம் தேதி திங்­கள்கிழ­மை­யில் இருந்து அனுப்­பப்­படும். அதைக்­கொண்டு, அவர்­கள் சிங்­கப்­பூர் தேர்வு மதிப்­பீட்­டுக் கழ­கத்­தின் இணை­யப்­பக்­கத்­தில் நுழை­ய­லாம்.

தேர்வு முடி­வு­களை நேரில் சென்று பெற முடி­யாத மாண­வர்­கள், அது­கு­றித்து தங்­கள் பள்­ளிகளுக்­குத் தெரி­விக்­கும்­படி கல்­வி­ய­மைச்சு அறி­வு­றுத்­தி­யுள்­ளது. மேலும், அவர்­கள் தங்­கள் தேர்வு முடி­வு­க­ளைப் பெற்­றுக்­கொள்ள இன்­னொ­ரு­வரை நிய­மிக்­க­லாம். தனிப்­பட்ட முறை­யில் தேர்வு எழு­தி­ய­வர்­களுக்கு இம்­மா­தம் 12ஆம் தேதி முதல் அஞ்­சல் வழி தேர்வு முடி­வு­கள் அனுப்­பி­வைக்­கப்­படும். சிங்­பாஸ் வைத்­தி­ருப்­ப­வர்­கள் தேர்வு மதிப்­பீட்­டுக்­க­ழக இணை­யப் பக்­கம் வாயி­லா­க­வும் முடி­வு­க­ளைத் தெரிந்­து­கொள்­ள­லாம்.