பதின்ம வயதில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவருக்கு சீர்திருத்தப் பயிற்சி

பதின்ம வயதில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவருக்கு சீர்திருத்தப் பயிற்சி

2 mins read
532d69a2-e765-4bb5-801a-a73ab7d3dd78
-

உயர்­நி­லைப் பள்­ளி மாணவர் ஒருவர், 2020 ஜனவரியில், தூங்­கிக்­கொண்­டி­ருந்த தங்­கை­யைப் பாலி­யல் கொடு­மைக்கு ஆளாக்­கி­யது, உடல்­ரீ­தி­யா­கத் துன்­பு­றுத்­தி­யது ஆகிய குற்­றங்­க­ளுக்­காகக் கைது செய்­யப்­பட்­டார்.

பின்­னர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்ட அவர் மற்­றொரு 13 வய­துச் சிறு­மி­யைப் பாலி­யல் வன்­பு­ணர்வு செய்­தார்.

இக்­குற்­றங்­க­ளின் தொடர்­பில் தற்­போது 20 வய­தா­கும் அந்த ஆட­வ­ருக்­குக் குறைந்­தது 12 மாதங்­கள் சீர்­தி­ருத்­தப் பயிற்சி விதிக்­கப்­பட்­டுள்­ளது.

தடுப்­புக் காவல் நிலை­யத்­தில் அவர் இதை நிறை­வேற்ற வேண்­டும் என்­றும், சீர்­தி­ருத்­தப் பயிற்­சி­யில் கடு­மை­யான உடற்­பயிற்சி, மன­நல ஆலோ­சனை ஆகி­ய­வை­யும் இடம்­பெ­ற­லாம் என்­றும் கூறப்­பட்­டது.

பாலி­யல் வன்­பு­ணர்வு தொடர்­பில் சுமத்­தப்­பட்ட இரு குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் ஆட­வர் ஒப்­புக்­கொண்­டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜன­வரி 29ஆம் தேதி ஆட­வ­ரால் பாதிக்­கப்­பட்ட அவ­ரது தங்கை தொடக்­கப்பள்­ளி­யில் படித்­துக்­கொண்­டி­ருந்­தார். அதன் தொடர்­பில் தடுத்­து­வைக்­கப்­பட்ட ஆட­வர் பின்­னர் பிப்­ர­வரி 1ஆம் தேதி பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார்.

இந்­நி­லை­யில் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட்­டில் தனது வீட்­டின் கீழ்த்­த­ளத்­தில் சந்­திக்க வரும்­படி 13 வய­துச் சிறுமி ஒரு­வரை அந்த ஆட­வர் அழைத்­த­தா­கக் கூறப்­பட்­டது.

அச்­சி­று­மி­யி­டம் ஆட­வர் தவ­றாக நடந்­து­கொண்­ட­து­டன் அவ­ரைப் பாலி­யல் வன்­பு­ணர்வு செய்­த­தா­கவும் கூறப்­பட்­டது.

பின்­னர் அவ்­வி­டத்­தி­லி­ருந்து வீட்­டுக்­குத் தப்­பிச் சென்ற சிறு­மி­யி­டம் நடந்­தது குறித்து யாரி­ட­மும் சொல்ல வேண்­டாம் என்று கோரி ஆட­வர் குறுஞ்­செய்தி அனுப்­பி­னார். இச்­சம்­ப­வத்­தால் சிறுமி உள­வி­யல் ரீதி­யா­கக் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டார்.

பாதிக்­கப்­பட்ட இரு சிறு­மி­களி­டம் தவ­றாக நடந்­து­கொண்­டதை ஒப்புக்கொண்டதுடன், 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்­தில் எட்டு அல்­லது ஒன்­பது வயது நிரம்­பிய தங்­கை­யி­டம் தவ­றாக நடந்­து­கொண்­ட­தை­யும் 2018ல் அவரைக் காயப்­படுத்­தி­ய­தை­யும் ஆடவர் ஒப்­புக்­கொண்­டார்.

பாதிக்­கப்­பட்ட சிறு­மி­க­ளின் அடை­யா­ளங்­க­ளைக் காக்­கும் பொருட்டு ஆட­வர் பற்­றிய மேல்­வி­வ­ரங்­களை வெளி­யிட அனு­மதி இல்லை.

ஆடவருக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்படக் கூடாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.

ஆடவர் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபட வாய்ப்பு அதிகம் என்று மனநல நிபுணர் மதிப்பிட்டுள்ளதை அவர்கள் சுட்டினர்.

ஆடவரின் பாலியல் மனப்போக்கு அவர் மீண்டும் தவறு செய்யும் வாய்ப்பைக் காட்டுவதாகவும் அவரது தவறான நடத்தை முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.