அப்பர் சிராங்கூன் வட்டாரத்தில் சாலை விபத்து; இருவர் மருத்துவமனையில் 

அப்பர் சிராங்கூன் வட்டாரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தால் இரு ஆடவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். 

அப்பர் சிராங்கூன், பார்ட்லி சாலை சந்திப்பில் இரண்டு அடுக்கு பேருந்தும் டாக்சியும் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது. ஜனவரி 5 ஆம் தேதியன்று இரவு 11 மணியளவில் விபத்து குறித்து அழைப்பு கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது. 

58 வயது பேருந்து ஓட்டுநரும் 67 வயது டாக்சி ஓட்டுநரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். 

நேராக சென்றுகொண்டிருந்த மஞ்சள் நிற டாக்சியை இடது பக்கத்திலிருந்து திரும்பும் பேருந்து மோதுவதை பேஸ்புக் பக்கம் ஒன்றில் வெளியிடப்பட்ட காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பேருந்தில் இருந்த பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் கூறியது. 

பேருந்து ஓட்டுநர் விசாரிக்கப்பட்டு வருகிறார். 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!