மோசமான பாலியல் குற்றவாளிகளில் 15 விழுக்காட்டினருக்கு பிரம்படி இல்லை

1 mins read
954bf767-7570-48c6-94ca-e346732f95e5
படம்: பிக்ஸாபே -

கடந்த இரண்டு ஆண்­டு­களில் மோச­மான பாலி­யல் மற்­றும் காயப்­ப­டுத்­து­தல் குற்­றங்­க­ளுக்­காக 2,234 ஆட­வர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­களில் 15 விழுக்­காட்­டி­னர், அதா­வது 328 பேர், 50 வய­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் என்­ப­தால் அவர்­க­ளுக்கு பிரம்­படி தரப்­ப­ட­வில்லை.

சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம், நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று முன்­தி­னம் இதை எழுத்­து­பூர்­வ­மா­கத் தெரி­வித்­தார்.

பாலி­யல் வன்­பு­ணர்வு, பாலி­யல் தாக்­கு­தல், சிறு­வ­ரி­டம் பாலி­யல் வன்­பு­ணர்வு, கடு­மை­யா­கக் காயப்­ப­டுத்­து­தல், குற்­றம் புரி­யும் நோக்­கில் கொலை செய்­தல் போன்­றவை பாலி­யல் வன்­கொடுமை மற்­றும் காயப்­ப­டுத்­து­தல் குற்­றங்­க­ளா­கக் கரு­தப்­படும்.

பாலி­யல் வன்­கொ­டுமை குற்­றங்­க­ளுக்­காக கைதான 2,234 ஆட­வர்­களில் 1,906 பேர் 50 வயது அல்­லது அதற்­கும் குறை­வான வய­தில் குற்­றங்­க­ளைப் புரிந்­த­னர்.

ஆனால் அவர்­களில் 21 பேர் மட்­டும் கைதா­ன­போது 50 வய­தைத் தாண்­டி­விட்­ட­னர். அந்த 21 பேரில் 17 பேர் பாலி­யல் குற்­ற­வா­ளி­கள் ஆவர். 50 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு பிரம்­படி விதிக்க சட்­டத்­தில் இட­மில்லை.

கடும் பாலி­யல் குற்­ற­வா­ளி­கள் தொடர்­பான புள்­ளி­வி­வ­ரங்­களை வழங்­கு­மாறு உள்­துறை அமைச்­ச­ரி­டம் ஜூரோங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டாக்­டர் டான் வூ மெங் கேட்­டி­ருந்­தார்.

50 வய­துக்கு மேற்­பட்ட பாலி­யல் வன்­பு­ணர்வு குற்­ற­வாளி களுக்­கும் பிரம்­படி தரப்­பட வேண்­டும் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் கடந்த மாதம் பதி­விட்­டதை அடுத்து, அந்த விவ­கா­ரம் பர­வ­லான கவ­னத்தை ஈர்த்­தது.