கத்திமுனையில் மாதைப் பிணை பிடித்தவர் மீது குற்றச்சாட்டு

கத்திமுனையில் மாதைப் பிணை பிடித்தவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
91e88bee-ca9f-42bd-910e-bd618117d173
-

கத்­தி­மு­னை­யில் 60 வயது மாதைப் பிணை பிடித்த ஆட­வர்­மீது பொது இடத்­தில் ஆயு­தம் வைத்­தி­ருந்­த­தாக நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

முகம்­மது ஃபைஸல் முகம்­மது ஆரிஃப் என்ற அந்த 42 வயது ஆட­வர் நீதி­மன்­றக் குற்­றப் பதி­வக அலு­வ­ல­கத்­தில் முன்­னி­றுத்­தப்­பட்­டார்.

அத­னைத் தொடர்ந்து, மருத்­து­வப் பரி­சோ­த­னைக்­காக மன­ந­லக் கழ­கத்­தில் அவர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்.

புளோக் 108, ஈசூன் ரிங் ரோட்­டில் ஒரு மாதைக் கத்­தி­மு­னை­யில் பிணை பிடித்­த­தற்­காக முகம்மது நேற்று முன்­தி­னம் கைது செய்­யப்­பட்­டார்.

காலை 7.35 மணி­ய­ள­வில் உதவி கோரி தக­வல் கிடைத்­ததை அடுத்து, காவல்­து­றை­யி­னர் சம்­பவ இடத்­திற்கு விரைந்­த­னர்.

அங்கு ஆட­வர் ஒரு­வர், ஒரு மாதின் கழுத்­தில் கத்­தியை வைத்­த­வாறு பிணை பிடித்­தி­ருந்­ததை அவர்­கள் கண்­ட­னர்.

காவல்­து­றை­யி­ன­ரின் சமா­தானப் பேச்­சுக்கு உடன்­ப­டாத அந்த ஆட­வர், கிட்­டத்­தட்ட 50 மீட்­டர் தொலை­விற்கு கத்­தி­முனை­யில் அந்த மாதை அரு­கில் இ­ருந்த காப்­பிக்­கடைக்­குக் கொண்டு சென்­றார்.

பின்­னர் காவல்­து­றை­யின் அவ­ச­ர­கால நட­வ­டிக்­கைக் குழு­வி­னர் அதி­ரடி­யா­கச் செயல்­பட்டு, அவரை மடக்கிப் பிடித்து, அந்த மாதை விடு­வித்­த­னர்.

கிட்­டத்­தட்ட 20 நிமி­டங்­களில் எல்­லாம் முடிந்­து­விட்­டது.

இலே­சான காய­முற்ற அந்த மாது மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல மறுத்­து­விட்­டார்.

முகம்­ம­தின் சிறு­நீ­ரைப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தி­ய­போது, அவர் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட போதைப்­பொ­ருள் உட்­கொண்­டி­ருந்­ததை மத்­திய போதைப்­பொருள் ஒழிப்­புப் பிரிவு கண்­டு­பி­டித்­தது.

இத­னால், போதைப்­பொ­ருள் தொடர்­பான குற்­றங்­க­ளி­லும் அவர் ஈடு­பட்­டுள்­ளாரா என்­றும் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கிறது.

அந்த ஆடவருக்கும் அந்த மாதிற்கும் ஒருவருக்கொருவர் தெரியாது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.