ஒப்பந்ததாரருக்கு அழைப்பாணை

ஒப்பந்ததாரருக்கு அழைப்பாணை

2 mins read
7b4a27dc-f3c9-4fb5-b786-b7de5d83435a
படம்: சீன ஊடக குழுமம் -

துணைச் சாலையில் இடையூறு; தீயை அணைப்பதில் தாமதம்

கண்­வி­ழிப்­புச் சேவைக்­காக துணைச் சாலை­யில் ஒப்­பந்­த­தா­ரர் கூடா­ரம் ஒன்றை எழுப்­பி­ய­தால், ஹெண்­டர்­சன் ரோடு வாடகை வீட்­டில் மூண்ட தீயை அணைக்க சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை வீரர்­க­ளுக்கு 18 நிமி­டங்­கள் தாம­தம் ஏற்­பட்­டது.

இதன் தொடர்­பில் சம்­பந்­தப்­பட்ட ஒப்­பந்­த­தா­ர­ருக்கு தஞ்­சோங் பகார் நகர மன்­றம் அழைப்­பாணை விடுத்­துள்­ளது.

கடந்த மாதம் ஏற்­பட்ட தீச்­சம்­ப­வத்­தின்­போது தீயை அணைக்க போரா­டிய முழு­நேர தேசிய சேவை­யா­ளர் எட்­வர்ட் எச்.கோ, 19, உயி­ரி­ழந்­தார்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சின் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்த தஞ்­சோங் பகார் நகர மன்­றம், தீயை அணைக்­கும் பகு­தி­களில் கூடா­ரங்­களை எழுப்­பு­வது நகர மன்ற விதி­க­ளுக்கு எதி­ரா­னது என்று குறிப்­பிட்­டது. புளோக்­கின் வெற்றுத்­த­ளத்­தில் கண்­வி­ழிப்­புச் சேவையை நடத்­த­வும் கூடா­ரத்­தைக் கட்­ட­வும் அதி­கா­ரி­க­ளி­டம் இ­ருந்து அனு­மதி பெற வேண்­டும்.

டிசம்­பர் 7ஆம் தேதி மாலை­யில் அந்­தக் கூடா­ரம் எழுப்­பப்­பட்­ட­தா­க­வும் புளோக் 91 ஹெண்­டர்­சன் ரோடு வாடகை வீட்­டில் டிசம்­பர் 8ஆம் தேதி காலை தீ மூண்­ட­தா­க­வும் நகர மன்­றம் கூறி­யது.

"துணைச் சாலை­யில் பாதையை மறைக்­கும் விதத்­தில் கூடா­ரத்தை எழுப்­பிய ஒப்­பந்­த­தா­ர­ருக்கு நகர மன்­றம் அழைப்­பாணை விடுத்­துள்­ளது," என்ற நகர மன்­றம், அது­கு­றித்த மேல்­வி­வ­ரங்­க­ளைக் குறிப்­பிட மறுத்து­விட்­டது.

நாடா­ளு­மன்­றத்­தில் உறுப்­பினர்­கள் முரளி பிள்ளை, பாட்டா­ளிக் கட்­சி­யின் ஜெரால்ட் கியாம் நேற்று கேட்ட கேள்­வி­களுக்கு உள்­துறை துணை அமைச்­சர் முகம்­மது ஃபைஷால் இப்­ரா­கிம் பதி­ல­ளித்­தார்.

துணைச் சாலை­யில் கூடா­ரம் எழுப்­பப்­பட்­ட­தால், தீயை அணைப்­ப­தற்­குப் பாதையை வகுக்க, குடி­மைத் தற்­காப்­புப் படை வீரர்­கள் அங்­கி­ருந்த தடுப்பு­களை அகற்ற வேண்­டி இ­ருந்­த­தாக அவர் சொன்­னார்.

இத­னால் 18 நிமி­டங்­க­ள் தாம­தம் ஏற்­பட்­ட­தாக அவர் கூறி­னார்.

தேசிய சேவை­யா­ளர் கோவின் மர­ணத்­திற்கு கார­ண­மான அம்­சங்­கள் குறித்து இப்போ­தைக்கு பேச இய­லாது என்று சொன்ன டாக்­டர் ஃபைஷால், அந்த வீர­ரின் மரணம் குறித்து தனிப்­பட்ட முறை­யில் காவல்­துறை தற்­போது விசா­ரணை நடத்தி வரு­வ­தா­கக் கூறி­னார்.