கடல்துறையில் பாதுகாப்பு கூடியதால் மரணம் குறைவு

கடல்துறையில் பாதுகாப்பு கூடியதால் மரணம் குறைவு

2 mins read
34c653cf-98f7-4d70-afeb-c83340da7955
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடல்­து­றைத் தொழில்­க­ளுக்­கான வேலை­யி­டப் பாது­காப்பு நில­வ­ரம் மேம்­பட்டு உள்­ளது.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் முதல் அந்­தத் துறை­யில் வேலை­யிட மர­ணம் எது­வும் பதி­வா­க­வில்லை. அதே­நே­ரம் அந்த ஆண்­டின் முதல் எட்டு மாதங்­களில் ஐந்து மர­ணங்­கள் பதி­வா­யின.

இது சரா­ச­ரி­யாக மாதத்­திற்கு 0.6 மர­ணம் என்று கணக்­கி­டப்­பட்­டது.

ஆறு மாத காலத்­திற்­கான மேம்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு முறையை 2022 செப்­டம்­பர் 1ல் மனி­த­வள அமைச்சு கொண்டு வந்­தது.

வேலை தொடர்­பான மர­ண­ம­டைந்­தோர் மற்­றும் காய­ம­டைந்­தோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தைத் தொடர்ந்து அறி­மு­கம் செய்­யப்­பட்ட கடு­மை­யான பாது­காப்பு ஏற்­பா­டு­கள் அடுத்த மாதம் வரை தொட­ரும்.

பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து கடல்­து­றை­யில் கடு­மை­யா­கக் காய­ம­டைந்­தோர் எண்­ணிக்­கை­யும் கடந்த ஆண்டு செப்­டம்­பர் முதல் நவம்­பர் வரை பாதி­யா­கக் குறைந்­தது. முன்­ன­தாக மாதம் 1.5 என்ற விகி­தத்­தில் இருந்த இந்த எண்­ணிக்கை 0.7 என்று இறங்­கி­யது.

இந்த விவ­ரங்­களை மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது நேற்று கருத்­த­ரங்கு ஒன்­றில் வெளி­யிட்­டார்.

வேலை­யிட பாது­காப்பு மற்­றும் சுகா­தார மன்­ற­மும் சிங்­கப்­பூர் கடல்­துறை தொழிற்­கூ­டங்­க­ளின் சங்­க­மும் இணைந்து இந்­தக் கருத்­த­ரங்கை நடத்­தின.

கடல்­து­றைத் தொழில்­க­ளுக்­கான வேலை­யிட பாது­காப்பு மற்­றும் சுகா­தார நிர்­வாக முறை அம­லாக்­கம் தொடர்­பான, திருத்­தப்­பட்ட வழி­காட்­டிக் குறிப்­பு­களை திரு ஸாக்கி இக்­க­ருத்­த­ரங்­கில் தொடங்கி வைத்­தார்.

மர­ணம், காயம் தொடர்­பான முன்­னேற்ற எண்­ணிக்கை, வேலை­யிட பாது­காப்பு மற்­றும் சுகா­தா­ரம் தொடர்­பாக நிறு­வ­னங்­கள் கவ­னத்­து­டன் நடந்து கடப்­பாட்­டு­டன் செயல்­பட்­டால் விபத்­து­கள் தவிர்க்­கப்­ப­ட­லாம் என்­பதை உணர்த்­து­கிறது," என்­றார் அவர்.

நாட­ளா­விய சரா­சரி வேலை­யிட மரண எண்­ணிக்கை, 2022ஆம் ஆண்­டின் முதல் எட்டு மாதங்­களில் மாதம் 4.5 என இருந்­தது.

செப்­டம்­பர் முதல் டிசம்­பர் வரை­யி­லான காலப் பகு­தி­யில் இது 2.5 என்று குறைந்­த­தாக திரு ஸாக்கி குறிப்­பிட்­டார்.

அதே­நே­ரம் டிசம்­பர் மாதத்­தில் மட்­டும் நான்கு வேலை­யிட மர­ணங்­கள் நிகழ்ந்­த­தைச் சுட்­டிய அவர், ஊழி­யர்­களை பாது­காப்­பா­க­வும் உடல்­ந­லத்­து­ட­னும் வைத்­தி­ருக்­கும் கடப்­பாடு கட்­டிக்­காக்­கப்­பட வேண்­டும் என்­றார்.

நிறு­வ­னங்­கள் தங்­க­ளது வேலை­யிட பாது­காப்பு, சுகா­தார நிர்­வாக முறை­களை தொடர்ந்து மேம்­ப­டுத்­து­மாறு அவர் வலி­யு­றுத்­தி­னார்.

முறை­யான அபா­யத் தடுப்பு நட­வ­டிக்கை அம­லாக்­கம் மற்­றும் பாது­காப்­பான வேலை நடை­முறை ஆகி­ய­வற்­றுக்­கான நிர்­வாக முறை­களை அவர் அதற்கு உதா­ர­ண­மா­கச் சுட்­டி­னார்.

மேலும், விபத்­து­க­ளைத் தடுப்­ப­தற்­குத் தேவை­யான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் பற்றி தங்களது ஊழி­யர்­கள் தெரிந்­தி­ருப்­பதை நிறு­வ­னங்­கள் உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

திருத்தி வெளி­யி­டப்­பட்ட வழி­காட்­டிக் குறிப்­பு­கள், வேலை­யி­டப் பாது­காப்பு மற்­றும் சுகா­தா­ரத்­திற்கு நிறு­வ­னங்­க­ளின் மேலிட நிர்­வா­க­மும் ஊழி­யர்­களும் பொறுப்­பேற்க வலி­யு­றுத்­து­கிறது.