தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணையத் துன்புறுத்தலில் சிக்கும் பெண்கள், சிறுமியருக்கு உதவ புதிய மையம் திறப்பு

1 mins read
a8981884-d07d-40a4-beec-b910bca04d63
படம்: பிக்ஸாபே -

இணை­யம் வழி­யான தாக்குதல்களையும் துன்­பு­றுத்­தல்­களை யும் எதிர்­கொள்­ளும் பெண்­க­ளுக்­கும் சிறுமியருக்கும் ஆத­ர­வ­ளிக்க புதிய மையம் வாட்­டர்லூ ஸ்தி­ரீட்­டில் திறக்கப் பட்டுள்ளது. இம்­மா­தம் 19ஆம் தேதிமுதல் அவர்­கள் இம்­மை­யத்­தில் ஆத­ரவு நாட­லாம்.

தொடக்­க­மாக, இந்த மையத்­தில், பயிற்­சி­பெற்ற இரண்டு முழு­நேர ஆலோ­ச­கர்­கள் இருப்­பார்­கள். திங்­கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணிக்­கும் இரவு 9 மணிக்­கும் இடைப்­பட்ட நேரங்­களில் இவர்­கள் உத­விக்­குத் தயா­ராக இருப்­பார்­கள்.

'எஸ்ஜி ஹெர் எம்­ப­வர்­மண்ட்' என்­னும் லாப நோக்­க­மற்ற அமைப்­பின் தலை­வ­ரும் பிர­பல வழக்­க­றி­ஞ­ரு­மான யுவென் தியோ நேற்று ஒரு நிகழ்­வில் இத­னைத் தெரி­வித்­தார்.

புதிய மையம் தனது செயல்­பாட்­டைத் தொடங்­கு­வ­தா­க­வும் அவர் அறி­வித்­தார். மையத்­தின் சட்ட உதவி நிலை­யத்­தில் கிட்­டத்­தட்ட 50 தொண்­டூ­ழிய வழக்­ க­றி­ஞர்­கள் சேவை­யாற்­று­வார்­கள். இவர்­கள் இல­வசச் சட்ட உதவி மையத்­தை­யும் டிஎஸ்­எம்பி சட்ட நிறு­வ­னத்­தை­யும் சேர்ந்­த­வர்­கள்.

இணை­யத் துன்­பு­றுத்­தல்­க­ளைச் சமா­ளிக்­கும் அமைப்­பான 'சன்­லைட் அலை­யன்ஸ் ஃபார் ஆக் ஷன்' கடந்த ஆண்டு ஆய்வு ஒன்றை நடத்­தி­யது.

இணை­யத் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு, பெரும்­பா­லும் 25 வய­துக்­கும் 34 வய­துக்­கும் இடைப்­பட்ட பெண்­களே ஆளா­வ­தாக ஆய்வு கண்­ட­றிந்­தது.

பாலி­யல் துன்­பு­றுத்­தல், அந்­த­ரங்கப் புகைப்­ப­டங்­களை அனு­ம­தி­யின்றி வெளி­யி­டு­தல் போன்­றவை தொடர்­பான இம்­சை­களை இந்த வயதுப் பெண்கள் அனு­ப­வித்­த­தா­க­வும் ஆய்­வில் தெரி­விக்­கப்­பட்­டது.

மேலும், இது­போன்ற துன்பு­றுத்­தல்­க­ளுக்கு ஆளா­கும் பெண்­களில் 61 விழுக்­காட்­டி­னர், எங்கு உதவி நாடு­வது என்ற விவ­ரம் தெரி­யா­த­வர்­க­ளாக இருப்­ப­தா­க­வும் ஆய்­வ­றிக்கை குறிப்­பிட்­டது.