பாலியல் வழக்கில் திருப்பம்; ஆடவருக்குச் சிறை, பிரம்படி

பாலியல் வழக்கில் திருப்பம்; ஆடவருக்குச் சிறை, பிரம்படி

1 mins read
a82c7a82-cbb8-424a-8697-192391d8cf51
-

பாலி­யல் வன்­கொ­டுமை வழக்­கில் புதிய திருப்­ப­மாக ஆட­வ­ருக்கு தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­னாள் காத­லி­யின் கழுத்­தில் இருந்த அடை­யா­ளம் 'காதல் கடி' என்று அவர் கூறி­ய­தை­யும் மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் ஏற்க மறுத்­து­விட்­டது.

பதி­னொரு நாள்­க­ளாக நடந்த வழக்கு விசா­ர­ணைக்­குப் பிறகு கடந்த 2020 ஜூனில் அவரை உயர் நீதி­மன்­றம் விடு­வித்­தது.

இதற்கு எதி­ராக அர­சுத் தரப்­பில் மேல் முறை­யீடு செய்­யப்­பட்­டது.

இதை­ய­டுத்து செப்­டம்­பர் 2022ல் உயர் நீதி­மன்­றத்­தின் தீர்ப்பை மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் மாற்­றி­யது.

அந்த 45 வயது ஆடவருக்கு 13 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படி விதிக்கப்பட்டது.

இந்த நிலை­யில் மூவர் அடங்­கிய அமர்வு நேற்று ஆட­வ­ருக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்­ட­தற்­கான கார­ணங்­களை எழுத்­து­பூர்­வ­மாக விளக்­கி­யது.

பெண்­ணின் டீ சட்டை கிழிந்­தி­ருப்­பது, 'பிரா' கொக்­கி­க­ளுக்கு ஏற்­பட்ட சேதம், கழுத்­தில் உள்ள காயம் ஆகி­யவை பெண்­ணுக்கு எதி­ராக வன்­முறை நடந்­துள்­ள­தைத் தெள்­ளத்தெளி­வா­கக் காட்டுகிறது என்று நீதி­ப­தி­கள் குறிப்­பிட்­ட­னர்.

கழுத்­தில் ஏற்­பட்ட காயம், காதல் கடி­யால் ஏற்­பட்­டது அல்ல என்­றும் நீதி­ப­தி­கள் கூறி­னர்.

நீதி­ப­தி­கள் டே யோங் குவாங், ஜுடித் பிர­காஷ், வூ பி லி ஆகி­யோர் மூவர் அமர்­வில் இடம்­பெற்று இருந்­த­னர்.