தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏழு குடியிருப்புப் பேட்டைகளில் புதிய மிதிவண்டிப் பாதைகள்

3 mins read
4bec4ef1-29cf-4b13-8eac-9a3d1630ba3c
-

சிங்­கப்­பூ­ரின் கிழக்கு, வட­கி­ழக்­குப் பகு­தி­களில் உள்ள ஏழு குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் வசிப்­ப­வர்­க­ளுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய மிதி­வண்­டிப் பாதை­கள் அமைத்­துத் தரப்­படும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் உள்ள மிதி­வண்­டிப் பாதை கட்­ட­மைப்பை 2030ஆம் ஆண்­டுக்­குள் 530 கிலோ­மீட்­ட­ரி­லி­ருந்து 1,300 கிலோ­மீட்­ட­ருக்கு உயர்த்த ஆணை­யம் திட்­ட­மிட்­டுள்­ளது.

கேலாங், ஹவ்­காங், காக்கி புக்­கிட், மரின் பரேட், பொத்­தோங் பாசிர், செங்­காங், சிராங்­கூன் ஆகிய வட்­டா­ரங்­களில் புதி­தாக 55 கிலோ­மீட்­டர் தூர மிதி­வண்­டிப் பாதை­களை அமைக்க ஏலக்­

குத்­த­கைக்கு ஆணை­யம் அழைப்பு விடுத்­துள்­ளது.

2024ஆம் ஆண்­டி­லி­ருந்து படிப்­ப­டி­யாக அமைக்­கப்­பட இருக்­கும் இந்­தப் புதிய மிதி­வண்­டிப் பாதை­கள், பள்­ளி­கள் போன்ற முக்­கிய வச­தி­க­ளு­டன் குடி­யி­ருப்­பா­ளர்­களை இணைப்­ப­து­டன் குடி­யி­ருப்­புப் பேட்­டை­க­ளுக்கு இடையே மிதி­வண்டிப் பாதை இணைப்­பை­யும் மேம்­ப­டுத்­தும் என்று ஆணை­யம் கூறி­யது.

மிதி­வண்டி நிறுத்­து­மி­டங்­கள், மிதி­வண்­டி­கள் சாலை­யில் கடந்து செல்­வ­தற்­கான வச­தி­கள், வரை

ப­டங்­க­ளைக் கொண்ட பல­கை­கள் போன்ற கூடு­தல் உள்­கட்­ட­மைப்­பு­களும் அமைக்­கப்­பட இருக்­கின்றன.

பொங்­கோல் எம்­ஆர்டி நிலை­யத்­தை­யும் செங்­காங் சிற்­பப் பூங்­கா­வை­யும் இணைக்­கும் வகை­யில் செங்­காங்­கில் உள்ள தெம்­ப­னிஸ் விரை­வுச்­சா­லைக்­குக் குறுக்கே புதிய மிதி­வண்டி பாலத்­தைக் கட்ட ஆணை­யம் பரிந்­து­ரைத்­துள்­ளது.

2025ஆம் ஆண்­டுக்­குள் மேலும் 3,000 மிதி­வண்டி நிறுத்­து­ மி­டங்­கள் அமைத்­துத் தரப்­படும் என்­றும் ஆணை­யம் கூறி­யது. தற்­போது சிங்­கப்­பூ­ரெங்­கும் 254,000 மிதி­வண்டி நிறுத்­து­மி­டங்­கள் உள்­ளன.

புதிய மிதி­வண்டிப் பாதைகள் அமைக்­கப்­படும் ஏழு குடி­யி­ருப்­புப் பேட்­டை­க­ளில் ஏற்­கெ­னவே இருக்­கும் மிதி­வண்­டிப் பாதை­கள் அக­லப்­ப­டுத்­துப்­படும் என்று ஆணை­யம் கூறி­யது. இதன்­மூ­லம் மிதி­வண்டி ஓட்­ட­வும் நடக்­க­வும் கூடு­தல் இடம் இருக்­கும் என்று தெரி­விக்­கப்­படுகிறது.

அந்த ஏழு குடி­யி­ருப்­புப் பேட்­டை­களும் முதிர்ச்சி அடைந்த வட்­டா­ரங்­கள் என்­ப­தால் அங்­குள்ள சில சாலை­கள் மறு­ப­யன்­பாடு செய்­யப்­படும் என்று அறி­யப்­ப­டு­கிறது. புதிய மிதி­வண்­டிப் பாதை­களை அமைக்க அங்­குள்ள சாக்­க­டை­கள், பேருந்து நிறுத்­தங்­கள் அகற்­றப்­படும்.

இந்த மாற்­றங்­கள் சாத்­தி­ய­மா­ன­வையா என்­பதை உறுதி செய்ய மற்ற அமைப்­பு­க­ளு­டன் இணைந்து செயல்­பட இருப்­ப­தாக ஆணை­யம் கூறி­யது.

2030ஆம் ஆண்­டுக்­கான இலக்கு நிறை­வே­றி­ய­தும் பொதுக் குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் வசிப்­ப­வர்­களில் பத்­தில் எட்டு பேர் தங்­கள் வீட்­டி­லி­ருந்து சில நிமி­டங்­களில் மிதி­வண்­டிப் பாதையை அடைந்­து­வி­ட­லாம்.

இதற்­கி­டையே, அங் மோ கியோ, பீஷான், மத்­திய வர்­த்தக வட்­டா­ரம், தாமான் ஜூரோங், தெம்­ப­னிஸ், தோ பாயோ ஆகிய வட்­டா­ரங்­களில் 30 கிலோ­மீட்­ட­ருக்­கும் அதி­க­மான மிதி­வண்­டிப் பாதைக்­கான கட்­டுமானப் பணி­கள் அண்­மை­யில் நிறை­வ­டைந்­த­தாக ஆணைம் தெரி­வித்­தது.

மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­தைத் தவிர்த்து, சிங்­கப்­பூ­ரில் தற்­போது பிடோக், சாங்கி-சீமெய், ஜூரோங் லேக் வட்­டா­ரம், பாசிர் ரிஸ், பொங்­கோல், செங்­காங் உட்­பட பத்து குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் மிதி­வண்­டிப் பாதை­கள் உள்­ளன.

பீஷான், புக்­கிட் பாஞ்­சாங், சுவா சூ காங், தோ பாயோ, உட்­லண்ட்ஸ் ஆகிய வட்­டா­ரங்

­க­ளி­லும் கூடு­தல் மிதி­வண்­டிப் பாதை­க­ளுக்­கான கட்­டு­மான பணி­கள் நடந்­து­கொண்­டி­ருப்­

ப­தாக ஆணை­யம் கூறி­யது.

மிதி­வண்­டிப் பாதை­களை பாது­காப்­பான வகை­யில் பயன்­

ப­டுத்­து­வது தொடர்­பாக கல்வி, விழிப்­பு­ணர்வு முயற்­சி­கள் தொட­ரப்­படும் என்று ஆணை­யம் தெரி­வித்­தது.