வீட்டு விலையேற்றத்தைத் தணிக்கும் நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, தனியார், வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் விலை அதிகரிப்பு கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் மிதமடைந்ததாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
மேலும் பல வீவக, தனியார் வீடுகள் விற்பனைக்கு விடப்
படுவதை இனி எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறினார்.
கட்டட, கட்டுமான ஆணையம், சிங்கப்பூர் சொத்து மேம்பாட்டாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கிராண்ட் கோப்தார்ன் வாட்டர்ஃபிரண்ட் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் திரு லீ உரையாற்றினார்.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது சிங்கப்பூரின் சொத்துச் சந்தை நிலைகுலையாமல் வலுவாக இருந்ததை அவர் சுட்டினார்.

