முகமது பர்ஹான் ஸமாலி எனும் 34 வயது ஆடவருக்கு $200,000க்கு மேற்பட்ட முதலீட்டு மோசடி தொடர்பில் நேற்று மூன்றரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ந் கடந்த 2020, 2021ஆம் ஆண்டுகளில் மூன்று பேரை ஏமாற்றியது தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
இதேபோன்ற குற்றச்செயலுக்காக 16 மாதச் சிறைத்தண்டனையை நிறைவேற்றி வெளிவந்த சிறிது காலத்தில் இவர் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
சிறையிலிருந்து வெளிவந்த பிறகு நண்பர்கள், குடும்பத்தினரிடம் கடன் வாங்கி மின்வர்த்தக நிறுவனத்தைத் தொடங்கிய ஃபர்ஹானுக்கு இழப்பு ஏற்படவே போலியான முதலீட்டுத் திட்டத்தை முன்வைத்து பழைய நண்பர், அவரது மேற்பார்வையாளர், ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர் ஆகியோரை ஏமாற்றினார்.
உறுதியளித்தபடி பணம் கிடைக்காததால் ஓய்வுபெற்ற ஊழியர் காவல்துறையிடம் புகாரளித்ததாகக் கூறப்பட்டது.

