முழுநேர நிரந்தர வேலை பெற்ற தொழிற்படிப்பு மாணவர்கள் விகிதம் 59% ஆகக் கூடியது

முழுநேர நிரந்தர வேலை பெற்ற தொழிற்படிப்பு மாணவர்கள் விகிதம் 59% ஆகக் கூடியது

1 mins read
317b9216-3a7e-4fda-aab8-4aeb663a5f4f
-

படித்து பட்­டம் பெற்­ற­தும் முழு­நேர நிரந்­தர வேலை­க­ளைப் பெற்ற பல­துறை தொழிற்­கல்­லூரி மாண­வர்­க­ளின் விகி­தம் மூன்று ஆண்டு­களில் இல்­லாத அளவுக்கு 2022ல் 59% ஆக அதி­க­ரித்து உள்­ளது.

இந்த விகி­தம், 2021ல் 58.2% ஆக­வும் 2020ல் 52% ஆக­வும் இருந்­தது. கொவிட்-19 கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு இருந்த வேலை நிய­மன புள்­ளி­வி­வ­ரங்­கள் பழை­ய­படி இப்­போது அதி­க­ரிக்­கத் தொடங்கி இருக்­கின்­றன.

தேசிய சேவையை முடித்து வெளி­வ­ரும் புதிய பட்­ட­தா­ரி­களில் 10 பேரில் ஒன்­பது பேருக்கும் அதி­க­மா­ன­வர்­கள் அதா­வது 91.8 விழுக்­காட்­டி­னர் வேலை­யில் அமர்ந்­து­விட்­ட­னர் என்­பது 2022 பல­துறை தொழில் கல்­லூரி பட்­ட­தாரி வேலை நியமன ஆய்வு மூலம் தெரி­ய­வரு­கிறது.

இந்த விகி­தம் 2021ல் 92.2% ஆக இருந்­தது. 2020ல் 87.4% ஆக இருந்­தது.

சிங்­கப்­பூ­ரின் ஐந்து பல­துறை தொழிற்­கல்­லூ­ரி­களும் நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்கை இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தது.

பட்­ட­தா­ரி­க­ளின் சம்­ப­ள­மும் அதி­க­ரித்து இருக்­கின்­றன.

எட்டு துறை­க­ளைச் சேர்ந்த பட்­டப்படிப்பு மாண­வர்­க­ளின் தொடக்கச் சம்­ப­ளம் கூடி இருக்­கிறது.

சுகா­தார அறி­வி­யல் துறை பட்­ட­தா­ரி­க­ளின் சம்­ப­ளம்­தான் மூன்­றாண்டு காலத்­தில் ஆக அதி­க­மா­கக் கூடி­யது. அவர்­களின் ஊதி­யம் 2021ல் $2,650 ஆக இருந்­தது. அது 2022ல் $2,854 ஆக அதி­க­ரித்­தது என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.