அதிகாலை விபத்து: மூவர் மருத்துவமனையில் அனுமதி

அதிகாலை விபத்து: மூவர் மருத்துவமனையில் அனுமதி

2 mins read
c318f60d-b1c1-4775-90fc-3ebcaa1c8d9c
-

புக்­கிட் தீமா விரை­வுச்சாலையை நோக்­கிச் செல்­லும் சிலேத்­தார் விரை­வுச்சாலை­யில் லெண்­டோர் அவென்­யூ­வுக்கு முன்­ன­தாக நேற்று அதி­காலை நேரத்­தில் நிகழ்ந்த சாலை விபத்­தில் காய­ம­டைந்த மூன்று பேர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

அந்த விபத்து பற்றி அதி­காலை 3.08 மணிக்குத் தனக்குத் தக­வல் கிடைத்­த­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

விபத்­தில் சிக்­கிய காரை 22 வயது மாது ஓட்­டிச் சென்­றார். அந்த காரில் 24 வய­தும் 27 வய­தும் உள்ள ஆட­வர்­கள் இரு­வர் இருந்­த­னர்.

அந்த மூவ­ரும் கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். அப்­போது அவர்­கள் சுய­நி­னைவு­டன் இருந்­த­னர்.

இத­னி­டையே, நிலப் போக்கு ­வ­ரத்து ஆணை­யம் டுவிட்­டர் சமூக ஊடக இணை­யத்தளத்­தில் அந்த விபத்து பற்றி தெரி­வித்தது. அந்­தச் சாலை­யின் 3, 4, 5ஆம் தடங்­க­ளைத் தவிர்த்­துக் கொள்­ளும்­படி அதி­காலை 3.28 மணிக்கு வாகன ஓட்­டு­நர்­களுக்கு ஆலோ­சனை கூறி­யது.

பிறகு காலை 7.10 மணிக்கு மற்­றொரு செய்­தியை அது வெளி­யிட்­டது. தெம்­ப­னிஸ் விரை­வுச்சாலை வெளி­யே­றும் வழி வரை போக்­கு­வ­ரத்து தேக்­கம் இருப்­ப­தாக அது கூறி­யது.

ஆகை­யால், 4, 5ஆம் தடங்­களைத் தவிர்த்­துக்­கொள்­ளும்­படி அது ஒட்­டு­நர்­க­ளுக்கு ஆலோ­சனை கூறி­யது.

போக்­கு­வ­ரத்துத் தேக்­கம் நேற்­றுக் காலை 9 மணி வரை அக­ல­வில்லை. போக்­கு­வ­ரத்து மெது­வாக இருந்­த­தாக காலை 9.30 மணிக்கு டெலி­கி­ராமில் தக­வல்­கள் வெளி­யா­யின.

இத­னி­டையே, காரில் சிக்­கிக்­கொண்ட ஓட்­டு­நரை மீட்பு சாத­னத்­தைப் பயன்­ப­டுத்தி மீட்­ட­தாக குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

விபத்து பற்றி காவல்­துறை புலன்­வி­சா­ரணை நடத்தி வரு­கிறது.