உள்ளூர் கருவிக்கு அங்கீகாரம்

உள்ளூர் கருவிக்கு அங்கீகாரம்

1 mins read
191d517b-5805-4b99-aca0-dc8da559eabb
-

சிங்­கப்­பூ­ரில் உரு­வாக்­கப்­பட்டு தயா­ரிக்­கப்­படும் கொவிட்-19க்கு எதி­ரான முத­லா­வது ஏஆர்டி பரி­சோ­த­னைக் கரு­வியை சில்லறை விற்­ப­னைக்­குப் பயன்­ப­டுத்த சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் அங்­கீ­க­ரித்துள்ளது.

அந்­த சுய­ப­ரி­சோ­த­னைக் கருவியை 'செல்பே' என்ற உள்­ளூர் நிறு­வ­னம் உரு­வாக்கி இருக்­கிறது. அந்­தப் பரி­சோ­தனைக் கரு­விக்கு TEP@RT என்று பெயர்.

இப்­போ­தைக்கு அந்த நிறு­வ­னம் நாள் ஒன்­றுக்கு 10,000 கரு­வி­களை உரு­வாக்க முடி­யும். இதை நாள் ஒன்­றுக்கு 100,000 கரு­வி­கள் என்ற நிலைக்கு அதி­கப்­ப­டுத்த முடி­யும். கரு­வி­கள் பாசிர் பாஞ்­சாங்­கில் உள்ள அறி­வி­யல் பூங்கா ஆலை­யில் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

விலை தொடர்­பில் சில்­லறை வர்த்­தக நிறு­வ­னத்­து­டன் பேச்சு­வார்த்தை நடந்து வரு­வ­தாக நிறு­வ­னம் தெரி­வித்து உள்­ளது.