பொன்மணி உதயகுமார்
தனது 100வது ஆண்டு நிறைவின் கொண்டாட்டங்களில் ஓர் அங்க மாக இந்தியர் சங்கம், நேற்று 100 பானைகளில் பாரம்பரிய முறையில் பொங்கல் சமைக்கும் கொண்டாட்டத்தை லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தது.
இந்தியர் சங்க வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கொண்டாட் டத்தில் குடும்பங்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் எனப் பலர் குழுக்களாக கலந்துகொண்டனர்.
ஈராண்டுகளுக்குப் பிறகு கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீங்கி முழுவீச்சில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தில், இந்தியர்கள் மட்டுமன்றி மற்ற இனத்தவர்களும் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
வெளிநாட்டு ஊழியர்களும் இம்முறை கொண்டாட்டத்தில் இணைந்தனர்.
வெளிப்புறத்தில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. மழை, வெயில், பலத்த காற்று போன்ற சிக்கல்கள் இருந்தாலும் மக்கள் மகிழ்ச்சியோடு இறுதி வரை பொங்கல் குதூகலத்தைக் கைவிடாமல் இருந்தனர்.
இந்தியர் சங்கத்துக்கு வந்த வர்கள் ஆனந்தத்துடன் திரும்பியது தனக்கு மனநிறைவு அளித்ததாக இந்தியர் சங்க பெண்கள் பிரிவின் தலைவி திருமதி விஜயா சிகாமணி, 50, கூறினார்.
பொங்கல் கொண்டாடத்தில் தன் சக ஊழியர்களுடன் கலந்து கொண்ட மனிதவள நிர்வாகியான பிரேமலதா, 39, கலாசாரத்துடன் ஒன்றி விழாவைக் கொண்டாட நேற்றைய நிகழ்வு வழிவகுத்த தாகக் கூறினார்.
அதோடு, தமிழ்க் கலா சாரத்தை பற்றி தன் சக ஊழி யர்களுக்கு கற்றுக் கொடுக்க முடிந்தது என்றும் அவர் கூறினார்.
உறவினரின் நான்கு வயது மகன் மிலான் ஓஷனுடன் கொண்டாட்டத்தில் பங்கேற்ற காயத்திரி, 33, தமிழ்க் கலாசாரம் குறித்து கற்றுக்கொடுக்க கொண்டாட்டம் நல்ல வாய்ப்பாக அமைந்தது என்றார்.
இத்தகைய சுவாரசியமான கொண்டாட்டங்கள் இந்திய சமூ கத்திற்கு வலுசேர்க்கும் என்று அவர் கூறினார்.
வீட்டில் பொங்கல் சமைத்து பிரார்த்தனைகளை முடித்து விட்டு பொங்கல் கொண்டாட வந்திருந்தனர் தோழிகளான ராஜம்மாள் இந்திராணி, மணி மேகலை.
இவர்கள், தமிழ்ப் பாரம் பரியங்கள் பற்றி இளையர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என் பதற்காக இந்தியக் கொண்டாட் டங்களில் கலந்து கொண்டு ஊக்குவித்து வருகின்றனர்.
கூட்டுப் பொங்கலுடன், இந்தியர் சங்க வளாகத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கபடி விளையாட்டு, கயிறு இழுக்கும் போட்டி, கோலப் போட்டிகளும் நடைபெற்றன. கபடிப் போட்டியில் மொத்தம் எட்டுக் குழுக்கள் பங்கேற்றன.
இது மாதிரியான பொங்கல் கொண்டாட்டங்கள்தான் தங் களுக்கு பொங்கல் விழா உணர்வைத் தருகின்றன என்று கபடிப் போட்டியில் கலந்து கொண்ட ஊழியர்கள் கூறினர்.
கபடி விளையாட்டுக்கு மத்திய கபடி சங்கம் ஏற்பாடு செய்தது. அச்சங்கத்தின் உள்ளூர் நிகழ்வு, போட்டிகள் பிரிவின் தலைவரான சௌத்ரி, 24, வெளிநாட்டு ஊழியர்களை பொங்கல் அன்று ஒன்றிணைத்துக் கொண்டாடி யது சிறப்பான அம்சம் என்று குறிப்பிட்டார்.

