சுற்றுப்புறத்துக்குக் கேடு விளைவிக் காத கரிமக் கழிவற்ற எரிபொருளுக்கு மாற சிங்கப்பூர் பகீரத முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதே சமயத்தில் எரிபொருள் சந்தை பாதிக்கக்கூடாது என் பதில் அது கவனமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கரிமக் கழிவில்லாத எரிபொருளுக்கு மாறு வதற்குத் தேவையான நிதியைத் திரட்ட, புதிய முறிகளை வெளியிட எரிசக்தி சந்தை ஆணையம் திட்டமிடுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மூலம் அறியப்படுகிறது.
இரண்டு பில்லியன் டாலர் பல நாணய செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக பசுமை முறிகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. பசுமை முறிகள், சுற்றுச் சூழலுக்கு நன்மையளிக்கும் திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும்.
கரிமத்தை அதிகமாக வெளியேற்றும் நிறுவனங்களும் அரசாங்க அமைப்புகளும் கரிமக் கழிவைக் குறைப்பதை இலக்காகக்கொண்டு முறிகள் நிதியுதவி அளிக்கும்.
தற்போது இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் ஆலைகள் கரிமக் கழிவைக் குறைக்க உதவும் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு மாறவும் முறிகள் கைகொடுக்கும்.
இது பற்றிப் கருத்துரைத்த ஓசிபிசி வங்கியின் கடன்பற்று ஆய்வு பகுப்பாய்வாளர் இஸியன் ஹு, முறிகள் வெளியிடப்பட்டால் எரிபொருள் சந்தை ஆணையத்தின் முதல் முயற்சியாக அது இருக்கும் என்றார்.
பலதரப்பட்ட நிலைத்தன்மைமிக்க உள்கட்டமைப்புகளுக்கு பல பொது அமைப்புகள் இத்தகைய வழியைப் பின்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.
புதிய முறிகள், வெளிநாட்டு முதலீடுகளுக்கும் அனுமதியளிக்கும் எனத் தெரிகிறது.
ஆனால் இது பற்றி விளக்கம் அளிக்க எரிபொருள் சந்தை ஆணையம் மறுத்துவிட்டது.
சிங்கப்பூரின் கரியமில வாயு வெளியேற்றத்தில் மின்சாரத் துறையின் பங்கு மட்டும் 40 விழுக்காடாகும்.
இந்த நிலையில் சிங்கப்பூரின் எரிசக்தி விநியோகம் பாதிக்கப் படாமல் 2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றத்தில் பூஜ்யத்தை எட்டும் நோக்கத்தில் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

