வேலைகளின் தன்மை மாறும் சூழலில் கல்வித் தகுதி குறைந்தோருக்கு உதவி தேவை கல்வித் தகுதியில் குறைந்தோர் பின்தங்கிவிடும் அபாயம்

வேலைகளின் தன்மை மாறும் சூழலில் கல்வித் தகுதி குறைந்தோருக்கு உதவி தேவை கல்வித் தகுதியில் குறைந்தோர் பின்தங்கிவிடும் அபாயம்

2 mins read
6149a275-ed69-43fa-8153-b4ba344a7a3b
வேலை­கள் இயந்­தி­ர­ம­ய­மாகி வரு­வ­தா­லும் மின்­னி­லக்­க­ம­யத்­தா­லும் அதி­கக் கல்­வித் தகுதி பெற்ற சிங்­கப்­பூ­ரர் ஊழி­யர்­க­ளை­விட குறைந்த கல்­வித் தகுதி உள்ள சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளின் வேலை­க­ளுக்கு அதிக பாதிப்பு ஏற்­படும். படம்: பிக்ஸாபே -

வேலை­கள் இயந்­தி­ர­ம­ய­மாகி வரு­வ­தா­லும் மின்­னி­லக்­க­ம­யத்­தா­லும் அதி­கக் கல்­வித் தகுதி பெற்ற சிங்­கப்­பூ­ரர் ஊழி­யர்­க­ளை­விட குறைந்த கல்­வித் தகுதி உள்ள சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளின் வேலை­க­ளுக்கு அதிக பாதிப்பு ஏற்­படும் என்று கொள்கை ஆய்­வுக் கழ­கம் வெளி­யிட்ட ஆய்வு ஒன்று கூறி­யுள்­ளது.

கல்­வித்­த­குதி குறை­வாக உள்­ள­வர்­கள் அதி­வேக தொழில்­நுட்ப மாற்­றங்­கள் பற்றி அதி­கம் தெரிந்­தி­ருக்­க­வில்லை. வேலை­யிட மாற்­றங்­களை ஏற்­கும் மனப்­பான்மை அவர்களி­டம் குறை­வாக உள்­ளது, பயிற்சி பெறு­வ­தில் அவர்­கள் அதிக வல்­ல­வர்­கள் இல்லை என்று நேற்று வெளி­யி­டப்­பட்ட அந்த ஆய்வு குறிப்­பிட்­டது.

பட்­டப்­ப­டிப்பு படித்­த­வர்­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது, உயர்நிலைப் பள்ளி­யில் படித்த ஊழி­யர்­கள் வேலை மாறு­வது பற்றி அதிகம் கவலை கொள்­வ­தா­க­வும் ஆய்வு தெரி­வித்­தது. சிங்­கப்­பூ­ரில் ஏறத்­தாழ 2.3 மில்­லி­யன் உள்­நாட்டு ஊழி­யர்­கள் உள்­ள­னர். அவர்­களில் 27 விழுக்­காட்­டி­னர் குறை­வான கல்­வித் தகுதி பெற்­ற­வர்­கள் என்­றும் இப்­பி­ரி­வி­ன­ருக்கு உத­வி­கள் தேவை என்­றும் ஆய்­வா­ளர்­கள் கூறி­னர்.

குறை­வான கல்­வித் தகுதி பெற்ற உள்­நாட்டு ஊழி­யர்­களில் பத்­தில் எட்­டுப் பேர், பிள்­ளைப் பரு­வத்­தில் இருந்­த­தை­விட தாங்­கள் தற்­போது வாழ்க்­கை­யில் முன்­னேற்­றம் அடைந்­துள்ளதாகக் கூறி­னர். ஆனால் அவர்­கள் வருங்­கா­லத்­தில் வாழ்க்­கை­யில் மேலும் முன்­னேற்­றம் அடைந்து அடுத்த நிலைக்­குச் செல்­வது கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது.

ஆய்­வுக்கு கூட்­டா­கத் தலைமை வகித்த டாக்­டர் லோரல் டியோ, "இந்த இடை­வெ­ளி­க­ளை­யும் அபா­யங்­க­ளை­யும் கவ­னித்து சரி­செய்­ய­வில்லை என்­றால், நாம் இன்­னும் எவ்வளவு காலத்­துக்கு சமூகப் படிநிலை முன்­னேற்­றத்தை இவ்­வாறு எட்ட முடி­யும் என்று தெரி­ய­வில்லை," என்­றார்.

கடந்த அக்­டோ­ப­ரில் 1,010 உள்­நாட்டு ஊழி­யர்­க­ளி­டம் ஆய்வு நடத்­தப்­பட்­டது. சிங்­கப்­பூர் ஊழி­யர்­கள் எதிர்­கால வேலை­க­ளுக்­குத் தயாராய் உள்ளனரா அவர் ­க­ளின் தொழில் இலக்­கு­கள் யாவை, சமூ­கத்­தில் முன்­னேற்­றம் தொடர்பான அவர்­க­ளின் கருத்து ஆகி­யவை பற்றி ஆரா­யப்­பட்­டது.

பல ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூர், தொழில்­துறை, சேவைத் துறை வேலை­க­ளை­விட அறி­வு­சார் வேலை­களில் அதிக கவ­னம் செலுத்தி வந்­துள்­ளதை ஆய்வு சுட்­டி­யது.

சுமார் 3.5 மில்­லி­யன் பேர் அடங்­கிய சிங்­கப்­பூ­ரின் ஒட்­டு­மொத்த ஊழி­ய­ர­ணி­யில் 20 விழுக்­காட்­டி­னர் தொழில்நுட்ப, சேவை வேலை­களில் பணி­பு­ரி­கின்­ற­னர். கொவிட்-19 சூழ­லில் இத்­த­கைய துறை ஊழி­யர்­கள் அத்­தி­யா­வ­சிய ஊழி­யர்­கள் என்று அழைக்­கப்­பட்­ட­னர்.

எழுத்­தர், சேவைத் துறை ஊழி­யர், தொழிற்­சாலை மற்­றும் போக்­கு­வ­ரத்­துத் துறை ஊழி­யர்­கள், உள்­ள­டக்­கிய பிரி­வி­ன­ரில் பாதிக்­கும் குறை­வா­ன­வர்­கள், தங்­க­ளுக்கு அர்த்­த­முள்ள தொழில் இருப்­ப­தா­க­வும் தங்­கள் வேலை சமூ­கத்­தில் நல்ல மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தா­க­வும் ஆய்­வில் கூறி­னர்.

மாறாக, நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்­பர்­கள் ஆகி­யோ­ரில் பத்து பேரில் ஆறு பேர் தங்­கள் வேலை அர்த்­த­முள்­ளது என்று கரு­தி­னர்.

அத்­து­டன், சற்று அதிக வயது­உள்­ள­வர்­க­ளை­விட, 21 வயது முதல் 34 வயது வரை­யி­லா­ன­வர்­க­ளின் சமூகத் தகுதிநிலை சற்று குறை­வா­கவே உயர்ந்­தது என்று ஆய்வு கண்­ட­றிந்­தது.

முன்­னைய தலை­மு­றை­யி­ன­ரு­டன் ஒப்­பி­டும்­போது சொத்து சேர்க்க இளை­யர்­க­ளுக்கு அதி­க நேரம் இல்­லா­தது இதற்கு கார­ண­மாக இருக்­கலாம் என்று அவர்­கள் விளக்­கி­னர்.