தீவு விரைவுச் சாலையில் விபத்து; எட்டுப் பேர் காயம்

தீவு விரைவுச் சாலையில் விபத்து; எட்டுப் பேர் காயம்

1 mins read
de3318c6-520d-4e98-b2c3-a21d428f0bca
-

தீவு விரை­வுச்­சா­லை­யில் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்த கார் விபத்­தில் ஒரு வய­துக் குழந்தை உட்­பட எட்­டுப் பேர் காய­ம­டைந்­த­னர்.

சாங்­கியை நோக்­கிச்­செல்­லும் தீவு விரை­வுச்­சா­லை­யில் லோர்னி ரோடு வெளிச்­சா­லைக்கு முன்பு வேன், கார் மற்­றும் மோட்­டார்­சைக்­கிள் மோதிக்­கொண்­டன.

காரு­டன் மோது­வ­தற்கு முன் அந்த வேன், மோட்­டார்­சைக்­கி­ளு­டன் மோதி­யது.

காரின் பின் இருக்­கை­யில் பய­ணி­கள் சிக்­கிக்­கொண்­ட­தாக கூறப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் குடிமை தற்­காப்­புப் படை அவர்­களை மீட்­ட­தாக விபத்தை நேரில் பார்த்­த­வர் சாவ் பாவ் சீன நாளி­த­ழி­டம் கூறி­னார்.

இந்த விபத்து பற்றி காலை 9.43 மணிக்கு காவல்­து­றைக்­குத் தக­வல் அளிக்­கப்­பட்­டது. சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தனக்கு 9.45 மணி அள­வில் தக­வல் கிடைத்­த­தா­கக் கூறி­யது.

அந்த காரில் இருந்த மூவர், 29 வய­துக்­கும் 69 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

சிங்­கப்­பூர் குடிமை தற்­காப்­புப் படை அவர்­களை டான் டோக் செங் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­றது.

இந்த விபத்­தில் ஐவ­ருக்கு இலே­சான காயங்­கள் ஏற்­பட்­டன. அவர்­கள் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல மறுத்­து­விட்­ட­னர்.

46 வயது ஆண் வேன் ஓட்­டு­நர், 26 வயது பெண் மோட்­டார்­சைக்­கி­ளோட்டி, 34 வயது ஆண் கார் ஓட்­டு­நர், காரில் இருந்த 27 வயது பயணி, ஒரு வயது குழந்தை ஆகி­யோர் அந்த ஐவர்.

விபத்து குறித்து விசா­ரணை தொடர்­கிறது.