2026 இறுதிக்குள் தொடங்கும்

2026 இறுதிக்குள் தொடங்கும்

1 mins read
853aee9d-0621-4a4f-a508-92e904341035
-

ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ஆர்டிஎஸ் திட்டமிட்டபடி நடைபெறுகிறது

ஜோகூர் பாரு-சிங்­கப்­பூர் விரைவு ரயில் பாதை (ஆர்­டி­எஸ்) திட்­டத்­தின் கட்­டு­மா­னப் பணி­கள் திட்­ட­மிட்­ட­படி சிறப்­பாக நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்கின்­றன என்­றும் வரும் 2026 இறு­திக்­குள் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தும் இரு­நாட்டு இலக்கு எட்­டப்­படும் என்றும் சிங்­கப்­பூர், மலே­சிய வெளி­யு­றவு அமைச்­சர்­கள் தெரி­வித்­த­னர்.

மலே­சி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டி­ருக்­கும் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், அந்­நாட்டு வெளி­யு­றவு அமைச்­சர் ஸாம்ரி அப்­துல் காதிரை நேற்று சந்­தித்­தார்.

"அவர்­கள் இரு­வ­ரும் ஜோகூர் பாரு-சிங்­கப்­பூர் ஆர்­டி­எஸ் திட்­டத்­தின் முன்­னேற்­றம் குறித்து மகிழ்ச்சி தெரி­வித்­த­து­டன் 2026 இறு­திக்­குள் திட்­டம் நடை­மு­றைப்­படுத்­தப்­ப­டு­வதை ஆவ­லு­டன் எதிர்­பார்ப்­ப­தா­க­வும் தெரி­வித்­த­னர்," என்று சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சின் அறிக்கை கூறி­யது.

சிங்­கப்­பூ­ரில் உட்­லண்ட்ஸ் நார்த் எம்­ஆர்டி நிலை­யத்­துக்­கும் ஜோகூர் பாரு­வின் புக்­கிட் சாகா­ருக்­கும் இடைப்­பட்ட நான்கு கிலோ­மீட்­டர் ரயில் சேவை தொடங்­கும்­போது ஒரு மணி­நே­ரத்­துக்கு 10,000 பயணி­கள் செல்­ல­மு­டி­யும்.

இரு­நாட்டு வெளி­யு­றவு அமைச்­சர்­களும் நேற்று மின்­னி­லக்­கம், பசுமை பொரு­ளி­யல் என இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்­பின் விரி­வாக்­கம் பற்றி பேசி­னர்.

டாக்­டர் விவி­யன், அமைச்­சர் ஸாம்­ரியை சிங்­கப்­பூ­ருக்கு அதி­கா­ரத்­துவ வருகை மேற்­கொள்ள அழைப்பு விடுத்­தார்.

பின்­னர் மலே­சிய மாமன்­னர் அப்­துல்லா அகம்­மது ஷாவைச் சந்­தித்த அமைச்­சர் விவி­யன், சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உற­வை மேலும் வலு­வாக்­கும் கடப்­பாட்டை மறு­வு­று­திப்­ப­டுத்­தி­னார்.

டாக்­டர் விவி­யன் நாளை வரை மலே­சி­யா­வில் இருப்­பார் என்றும் அமைச்சு கூறியது.