சிந்திக்க வைத்த சிறப்புப் பொங்கல் நகைச்சுவைப் பட்டிமன்றம்

சிந்திக்க வைத்த சிறப்புப் பொங்கல் நகைச்சுவைப் பட்டிமன்றம்

2 mins read
f78ba860-9dbb-4fb8-9fb6-8b1e0fe4e41c
-

ரச்­சனா வேலா­யு­தம்

மகிழ்ச்­சி­யும் மன­நி­றை­வும் நிறைந்­தது வயல்­வெளி காலமா வாட்ஸ்­அப் காலமா என்ற தலைப்­பில் சென்ற 14ஆம் தேதி பொங்­கல் சிறப்பு நகைச்­சு­வைப் பட்­டி­மன்­றம் நடந்­தது. லிஷா­வு­டன் இணைந்து லிஷா இலக்­கிய மன்­றம் ஏற்­பாட்­டில் நடந்த இந்த பட்­டி­மன்­றம் பொலி@ கிளைவ் ஸ்தி­ரீட்­டில் நடை­பெற்­றது.

இரவு 7 மணிக்கு தொடங்­கிய இந்த பட்­டி­மன்­றத்தைக் காண ஐநூ­றுக்­கும் மேற்­பட்ட மக்­கள் திரண்டு வந்­த­னர்.

தமிழ்த்­தென்­றல் முனை­வர் எஸ்.டி. கலை­ய­மு­தன் பட்­டி­மன்­றத்­தின் நடு­வ­ராக நிகழ்ச்­சியை வழி­ந­டத்­தி­னார்.

இயற்­கை­யான வயல்வெளி காலமே சிறந்­தது, செயற்­கை­வாட்ஸ்­அப் காலம் நாம் மன­நிம்­மதியைக் கெடுத்­துள்­ளது என்று திரு தங்­கம் மூர்த்தி, திரு­மதி பா.கங்கா, திரு நா.அர்­ஜுன் வாதா­டி­னர்.

'பல் போனால் சொல் போகும்' என்ற காலம் முடிந்து இப்­போது செல் (cell) போனால், உயிரே போகும் என்று தொழில்­நுட்­பத்­திற்கு நாம் அடி­மை­யா­கி­ விட்டோம் என்­பதை சுட்டி நகைச்­சுவை­யு­டன் விவா­தித்­த­னர்.

மாறு­கின்ற உல­கம் மகத்­து­வ­மா­னதேயொழிய, மாற்­றமே இல்லை என்று மாறா­மல் இருப்­ப­வர்­கள் கல்­லுக்குகூட சம­மில்லை என்று கூறி, வாட்ஸ்­அப் காலத்­தின் நன்­மை­களை எடுத்துக் கூறி­னார் திரு கண்­ணன் சேஷாத்ரி.

அவ­ரு­டன் திரு சுந்­த­ர­ரா­மன், திரு தமீம் அன்­சாரி இருவரும் தொழில்­நுட்பக் காலம் பல திற­மை­களை வெளிப்­ப­டுத்­த­வும் நம் வாழ்க்­கையை மாற்றி அமைக்­க­வும் உத­வி­யுள்­ளது என்று வாதாடி கைதட்­டலைப் பெற்­ற­னர்.

தொழில்­நுட்பக் காலத்­தின் நன்­மை­களை அறிந்து, நமக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்­தும் நிலை­யில் மன­நி­றை­வோ­டும் மகிழ்ச்சி­யோ­டும் வாழ முடி­யும் என்று கூறி, சற்­றும் மனம் தள­ராத நம்­பிக்­கை­யு­டன் வாழ ஊக்­கு­விக்­கும் இந்த வாட்ஸ்­அப் காலமே சிறந்­தது என்று முனை­வர் கலை­ய­மு­தன் தீர்ப்பு வழங்­கி­னார்.