சிங்கப்பூர் நீரிணையில் ஏழு ஆண்டில் இல்லாத அளவு கூடிய கடற்கொள்ளை

சிங்கப்பூர் நீரிணையில் ஏழு ஆண்டில் இல்லாத அளவு கூடிய கடற்கொள்ளை

1 mins read
81eb30fb-18c2-4f8e-9c36-dd1a7a58ec9a
உல­கில் அதி­கக் கப்­பல் போக்குவரத்து மிகுந்த கப்­பல் பாதை­களில் ஒன்­றான சிங்­கப்­பூர் நீரி­ணை­யில் 2022ல் 55 கடற்­கொள்ளை, ஆயு­தம் ஏந்­திய கொள்­ளைச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் நீரி­ணை­யில் கடற்­கொள்ளை மற்­றும் ஆயு­தம் ஏந்­திய கொள்­ளைச் சம்­ப­வங்­கள் சென்ற 2022ஆம் ஆண்­டில், ஏழு ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்­குக் கூடி­யுள்­ளன. அக்­குற்­றங்­களில் பெரும்­பா­லா­ன­வற்­றில், பெரிய வணி­கக் கப்­பல்­கள், எண்­ணெய்க் கப்­பல்­கள் சம்­மந்­தப்­பட்­டி­ருந்­தன.

உல­கில் அதி­கக் கப்­பல் போக்குவரத்து மிகுந்த கப்­பல் பாதை­களில் ஒன்­றான சிங்­கப்­பூர் நீரி­ணை­யில் 2022ல் 55 கடற்­கொள்ளை, ஆயு­தம் ஏந்­திய கொள்­ளைச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன. ஒப்­பு­நோக்க, 2020ஆம் ஆண்­டில் 34 கொள்­ளைச் சம்­ப­வங்­களும் 2021ஆம் ஆண்­டில் 49 சம்­ப­வங்­களும் நடந்­தன.

41 சம்­ப­வங்­களில் பெரிய கப்­பல்­க­ளி­லும் மீத­முள்ள 14 சம்­ப­வங்­கள் சிறிய இழு­வைப் பட­கு­கள், சிறு விநி­யோ­கக் கப்­பல்­கள் ஆகி­ய­வற்­றி­லும் நிகழ்ந்­தன.

பெரும்­பா­லான சம்­ப­வங்­களில் சிறிய திருட்­டு­கள் நிகழ்ந்­தன. மேலும், 55 சம்­ப­வங்­களில் 53ல், கப்­பல் ஊழி­யர்­க­ளுக்­குக் காயம் ஏதும் ஏற்­ப­ட­வில்லை.

'ரீக்­காப்' எனப்­படும் ஆசி­யா­வில் கப்­பல்­களில் நடக்­கும் கடற்­கொள்­ளைச் சம்­ப­வங்­க­ளுக்கு எதி­ரான வட்­டார ஒத்­து­ழைப்பு உடன்­பாட்டு அமைப்பு நேற்று அந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­களை வெளி­யிட்­டது.

ரீக்­காப் அமைப்­பின் நிர்­வாக இயக்­கு­நர் கிருஷ்­ண­சு­வாமி நட­ரா­ஜன், கொள்­ளைச் சம்­ப­வங்­கள் கூடி­ய­தில் 2022ன் பொரு­ளி­யல், சமூ­கச் சூழ­லில் தாக்­கம் இருந்­த­தா­கச் சொன்­னார்.

"சிங்­கப்­பூர் நீரி­ணை­யில் தின­மும் சரா­ச­ரி­யாக 1,000 கப்­பல்­கள் செல்­கின்­றன. சூழல் சாத­க­மாக உள்­ள­து­டன், குறி வைக்க வாய்ப்­பும் கிடைக்­கும் பட்­சத்­தில், வேக­மா­கப் பணம் செய்ய நினைக்­கும் குற்­ற­வா­ளி­கள் கிடைக்­கும் வாய்ப்­பைப் பயன்படுத்தி தாக்­கு­வர்," என்று அவர் கூறி­னார்.