பத்தாண்டுக்கும் மேலான ரயில் மேம்பாட்டுப் பணிகள் நிறைவுறும்

2 mins read
67c10f8d-5f70-4958-afd9-268683210fdb
-

சிங்­கப்­பூ­ரின் இரண்டு எம்­ஆர்டி தடங்களில் பத்­தாண்­டு­க­ளுக்­கும் மேலாக நடை­பெற்று வரும் மேம்­பாட்­டுப் பணி­கள் இவ்­வாண்­டில் நிறை­வு­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

35 ஆண்டுகால வடக்கு-தெற்கு மற்­றும் கிழக்கு-மேற்கு எம்­ஆர்டி தடங்கள் சிங்­கப்­பூ­ரின் ஆகப்­ப­ழ­மை­யா­னவை. மேலும், சிங்­கப்­பூ­ரின் முதல் எம்­ஆர்டி தடங்கள் அவை. இவற்­றுக்­கான மேம்­பாட்­டுப் பணி­கள் 2012ஆம் ஆண்டு தொடங்­கி­ய­தாக போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

குறுக்­குத் தீவு எம்­ஆர்டி தடத்தின் நில அகழ்வு நிகழ்­வில் நேற்று கலந்­து­கொண்ட அவர், மேம்­பாட்­டுப் பணி­கள் குறித்த ஆக அண்­மை­ய தக­வல்­களை வெளி­யிட்­டார்.

இரண்டு எம்­ஆர்டி தடங்க­ளி­லும் ஆறு அடிப்­படை வட்­டா­ரங்­களில் மேம்­பாட்­டுப் பணி­கள் தொடங்­கி­ய­தில் மூன்று வட்­டா­ரங்­களில் பணி­கள் முடிந்­து­

விட்­ட­தாக திரு ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.

ஒரு ரயி­லுக்கு நெருக்­க­மாக மற்­றொரு ரயில் செல்­வதை அனு­ம­திக்­கும் சமிக்ஞை முறை, தண்­ட­வா­ளங்­க­ளைத் தாங்­கிப்­

பி­டிக்­கும் பல­கை­கள், ரயில்

­க­ளுக்­குத் தண்­ட­வா­ளம் மூலம் மின்­சக்தி அளிக்­கும் மூன்­றாம் ரயில் முறை ஆகி­யன தொடர்­பான பணி­கள் நிறை­வு­ற்­றன.

தண்­ட­வாள மின்­சுற்­றி­லும் ரயில்­க­ளி­லும் உள்ள மின்­சார முறை தொடர்­பான பணி­கள் இன்­னும் நீடிப்­ப­தாக திரு ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

வடக்கு-தெற்கு ரயில் பாதை­யில் உள்ள 27 எம்­ஆர்டி நிலை­யங்­க­ளுக்­கும் கிழக்கு-மேற்­குப் பாதை­யில் உள்ள 35 எம்­ஆர்டி நிலை­யங்­க­ளுக்­கும் மின்­சா­ரம் விநி­யோ­கிக்­கும் முறை­யில் 80 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்ட பணி­கள் ஏற்­கெ­னவே முடிந்­து­விட்­ட­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார். 1,050 கிலோ­மீட்­டர் தூரத்­திற்­கான கம்­பி­வ­டங்­க­ளை­யும் சாத­னங்­க­ளை­யும் மாற்­றும் பணி­களும் இதில் அடங்­கும் என்று அவர் மேலும் கூறி­னார்.

தண்­ட­வாள மின்­சுற்று என்­பது சமிக்­ஞை முறை­யின் ஒரு பகுதி. வேகம், இருப்­பி­டம் போன்­ற­வற்­றைக் கண்­கா­ணிக்­க­வும் கட்­ட­மைப்­பில் இயங்­கும் ரயில்­களை அடை­யா­ளம் காண­வும் செய­லாக்­கக் கட்­டுப்­பாட்டு மையத்­திற்கு அளிக்­கப்­படும் சமிக்­ஞை­யைச் சார்ந்து இது உள்­ளது. இந்­தப் புதிய முறை­யின்­கீழ், கோளா­று­களை அவை ஏற்­படும் முன்­னரே அடை­யா­ளம் காண­மு­டி­யும்.

இரண்டு ரயில் பாதை­க­ளி­லும் பழைய ரயில்­க­ளுக்கு மாற்­றாக 2018ஆம் ஆண்டு வாங்க ஏற்­பாடு செய்­யப்­பட்ட 106 புதிய ரயில்­களில் இறு­திக்­கட்ட சோதனை நடை­பெற்று வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் உள்ள எம்­ஆர்டி பாதை­களில் கிழக்கு-மேற்கு ஆக நீள­மா­னது. இதன் தூரம் 57 கிலோ­மீட்­டர். நிலத்­தடி, நிலத்­தின் மேற்­ப­ரப்பு என இரு­வகை எம்­ஆர்டி நிலை­யங்­க­ளைக் கொண்­டது இந்த ரயில் பாதை.

சிங்­கப்­பூர் முழு­வ­தும் உள்ள எம்­ஆர்டி கட்­ட­மைப்­பில் ஆறு எம்­ஆர்டி பாதை­கள் இயங்­கு­கின்­றன. இவற்­றில் 140க்கும் மேற்­பட்ட எம்­ஆர்டி நிலை­யங்­கள் உள்­ளன.