இந்தியாவின் மும்பை நகரத்தை நோக்கி நேற்று புறப்பட்ட விஸ்தாரா பயணிகள் விமானத்தில் எதிர்பாராதவிதமாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானம் மீண்டும் சாங்கி விமான நிலையத்துக்குத் திரும்பியது.
சிங்கப்பூரிலிருந்து 'யுகே106' விமானம் காலை 11.000 மணியில் புறப்பட்டது என்று ஃபிளைட்டிரேடர் இணையத்தளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'ஏர்பஸ் ஏ321' ரக விமானமான அது மலேசியாவுக்கு மேலே வட்டமடித்து பிறகு சாங்கி விமான நிலையத்துக்குத் திரும்பியது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஓர் இயந்திரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது என்று விஸ்தாரா பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விசாரித்தற்குப் பதிலளித்தார்.
"முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தைத் திருப்ப விமானிகள் முடிவு செய்தனர். அதன் பிறகு சாங்கி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது," என்றார் அவர்.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய மற்ற விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டதாகவும் அவர் கூறினார்.
பெரும்பாலான பயணிகள் அதே நாளில் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பதை விஸ்தாரா தெரிவிக்கவில்லை.
'ஏர்பஸ் ஏ321' விமானங்களில் 188 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும்.
சில பயணிகள் புதன்கிழமை மாலை புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
அவர்களுக்கு உணவு பற்றுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
டாடா சன்ஸ், எஸ்ஐஏ ஆகியவற்றின் கூட்டு நிறுவனம் விஸ்தாரா.

