சிராங்கூனில் மாண்டு கிடந்த ஆடவர்

சிராங்கூனில் மாண்டு கிடந்த ஆடவர்

1 mins read
9f876a73-7244-41fe-89be-b0f1e2ec4024
-

சிராங்­கூன் சென்ட்­ரல் டிரைவ், புளோக் 257ன் வெற்­றுத்­தளத்­தில் 59 வயது ஆட­வர் ஒரு­வர் இறந்­து­ கி­டந்­தது கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அதற்கு இரு­நாள்­க­ளுக்கு முன்­னரே அவர் இறந்­தி­ருக்­க­லாம் என நம்­பப்­ப­டு­கிறது. அப்­ப­கு­தி­யைச் சேர்ந்த துப்­பு­ர­வா­ளர் ஒருவர் அந்த ஆட­வ­ரின் உட­லைக் கண்­டார்.

கடை­சி­யாக அந்த ஆட­வ­ரைக் கடந்த 14ஆம் தேதி தாம் கண்­ட­தாக அந்­தத் துப்­பு­ர­வா­ளர் கூறி­னார் என்று ஷின்­மின் நாளி­தழ் செய்தி தெரி­வித்­தது.

அந்த வீவக புளோக்­கிற்­கும் கார்­நி­றுத்­தப் பூங்­கா­விற்­கும் இடைப்­பட்ட வெற்­றுத்­த­ளத்­தில் அவர் இரவு நேரத்தைக் கழிப்­ப­தைத் அத்­துப்­பு­ர­வா­ளர் அடிக்­கடி கண்டுள்ளார்.

அவ்­வ­கை­யில், கடந்த 14ஆம் தேதி அவர் பார்த்த அந்த ஆடரவ் அயர்ந்து தூங்­கு­வ­து­போல் தெரிந்த­தால் அவ­ரைத் தொந்­த­ரவு செய்ய துப்புரவாளர் விரும்­ப­வில்லை.

மறு­நாள் 15ஆம் தேதி பணி­வி­டுப்பு என்­ப­தால் 16ஆம் தேதி காலை 6 மணி­ய­ள­வில் வேலைக்­குத் திரும்­பி­னார் அந்­தத் துப்­பு­ர­வா­ளர். அப்­போது, அந்த ஆட­வர் இருந்த இடத்­தைக் கடந்­த­போது துர்­நாற்­றம் வீசியதை அவர் உணர்ந்­தார்.

அத­னைத் தொடர்ந்து, அருகே சென்று பார்த்­த­போது அவர் இறந்­து­விட்­டதை துப்­பு­ர­வா­ளர் உணர்ந்­தார். அதிர்ச்­சி­யில் உறைந்த அவர், உட­ன­டி­யாக அது­பற்றி தன் முத­லா­ளிக்­குத் தக­வல் தெரிவித்­தார். அந்த முத­லாளி பின்­னர் காவல்­து­றைக்­குத் தக­வல் அளித்­தார்.

ஆட­வ­ரின் மர­ணத்தை இயற்­கைக்கு மாறான ஒன்­றாக காவல்­துறை விசா­ரித்து வரு­கிறது.