பொது வீடமைப்புப் பேட்டைகளில் உள்ள அரசாங்க நிலத்தை மார்ச் 1ஆம் தேதி முதல் சிங்கப்பூர் நில ஆணையம் நிர்வகிக்கும்

பொது வீடமைப்புப் பேட்டைகளில் உள்ள அரசாங்க நிலத்தை மார்ச் 1ஆம் தேதி முதல் சிங்கப்பூர் நில ஆணையம் நிர்வகிக்கும்

2 mins read
94005589-0f82-4103-a964-934b14db4fd5
மார்ச் 1ஆம் தேதிக்­குப் பிறகு அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான காலி­யி­டத்­தைப் பயன்­ப­டுத்த விரும்­பு­வோர் https://app1.sla.gov.sg/tol எனும் இணைய முக­வ­ரி­யில் சிங்­கப்­பூர் நில ஆணை­யத்­தி­டம் விண்­ணப்­பிக்­க­லாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இர­வுச் சந்­தை­கள், 'ஹங்ரி கோஸ்ட்' விழா நட­வ­டிக்­கை­கள் போன்ற சமூ­கம் அல்­லது சம­யம் சார்ந்த நிகழ்ச்­சி­க­ளுக்கு வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கப் பேட்­டை­களில் உள்ள அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான நிலத்­தைப் பயன்­படுத்த விரும்­பு­வோர், மார்ச் 1ஆம் தேதி­யி­லி­ருந்து சிங்­கப்­பூர் நில ஆணை­யத்­தி­டம் அதற்கு விண்­ணப்­பிக்க வேண்­டும்.

தற்­போது வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் இதனை நிர்­வ­கித்து வரு­கிறது.

மேம்­பட்ட நிர்­வா­கம், செய­லாக்­கத் திறன் ஆகி­ய­வற்­றைக் கருத்­தில்­கொண்டு இம்­மாற்­றம் அம­லுக்கு வரு­வ­தாக ஆணை­ய­மும் கழ­க­மும் நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்கை குறிப்­பி­டு­கிறது.

பொது வீட­மைப்­புப் பேட்­டை­களுக்கு அப்­பால் உள்ள காலி­யிடங்­கள், பாலங்­க­ளுக்கு அடி­யில் உள்ள இடங்­கள் போன்­ற­வற்றை, சிங்­கப்­பூர் நில ஆணை­யம் தற்­போது நிர்­வ­கித்து வரு­கிறது. எடுத்­துக்­காட்­டாக ஹாவ் பார் வில்லா ரயில் நிலை­யம், டோவர் ரோடு போன்­ற­வற்­றுக்கு அரு­கில் அமைந்­தி­ருக்­கும் காலி­யி­டங்­க­ளைக் கூற­லாம்.

மார்ச் 1ஆம் தேதிக்­குப் பிறகு, பொது வீட­மைப்­புப் பேட்­டை­களில் உள்ள அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான காலி­யி­டங்­க­ளைப் பயன்­படுத்­திக்­கொள்ள தற்­கா­லிக உரி­மங்­களை ஆணை­யம் வழங்­கும்.

சமூக, சமய நிகழ்ச்­சி­கள் மட்டு­மன்றி சமூ­கத் தோட்­டம் அமைப்­ப­தற்­கும் இது பொருந்­தும். தற்­போது வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் ஏறக்­கு­றைய 1,408 ஹெக்­டர் பரப்­ப­ள­வி­லான காலி­யி­டங்­க­ளை­யும் அவற்­றின் தொடர்­பி­லான கிட்­டத்­தட்ட 600 தற்­கா­லிக உரி­மங்­க­ளை­யும் நிர்­வகிப்­ப­தா­கக் கூறப்­பட்­டது.

தற்­கா­லிக உரி­மம் பெறு­வ­தற்­கான நிபந்­த­னை­களில் மாற்­றம் இல்லை. நிர்­வாக மாற்­றம் சுமு­க­மா­க­வும் இடை­யூறு இன்­றி­யும் இடம்­பெ­றும் என்று ஆணை­ய­மும் கழ­க­மும் உறு­தி­கூ­றின.

மார்ச் 1ஆம் தேதி வரை தற்­கா­லிக உரி­மம் தொடர்­பான உத­வி­க­ளுக்கு, தொடர்ந்து வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்தை நாட­லாம். இதன் தொடர்­பில் 6490 3177 என்ற தொலை­பேசி எண்­ணிலோ www.hdb.gov.sg/efeedback எனும் இணை­யத்­தளம் மூல­மா­கவோ வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்தை அணு­க­லாம்.

மார்ச் 1ஆம் தேதிக்­குப் பிறகு அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான காலி­யி­டத்­தைப் பயன்­ப­டுத்த விரும்­பு­வோர் https://app1.sla.gov.sg/tol எனும் இணைய முக­வ­ரி­யில் சிங்­கப்­பூர் நில ஆணை­யத்­தி­டம் விண்­ணப்­பிக்­க­லாம்.

குறிப்­பிட்ட நிலப் பகு­திக்கு விண்­ணப்­பிக்க இய­லுமா என்­பதை www.onemap.gov.sg எனும் இணை­யத்­த­ளம் மூலம் தெரிந்­து­கொள்­ள­லாம்.

நக­ராட்சி நிர்­வாக விவ­கா­ரங்­கள் தொடர்­பில் கருத்­து­ரைக்க, தொடர்ந்து ஒன்­சர்­விஸ் செய­லி­யைப் பயன்­ப­டுத்­த­லாம்.