நிறுவனங்கள்: 'மெட்டாவெர்ஸ்' பொருளியல் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும்

2 mins read
eb380e0a-ab45-4928-a3af-bdf7c9cb2ef9
மெட்­டா­வெர்ஸ் தள­மா­னது இவ்­வு­ல­கில் சாத்­தி­யப்­ப­டாத வகை­யி­லான அனு­ப­வங்­களை மக்­கள் முப்­ப­ரி­மாண வெளி­யில் பெறு­வ­தற்கு உத­வு­கிறது. படம்: பிக்ஸாபே -

இந்த ஆண்டு பொரு­ளி­யல் வளர்ச்சி சிறப்­பாக இருக்­காது எனக் கரு­தப்­படும் நிலை­யில் 'மெட்­டா­வெர்ஸ்', நீடித்த நிலைத்­தன்மை ஆகி­ய­வற்­றில் முத­லீடு செய்­வ­தால் வளர்ச்சி அதி­க­ரிக்­கும் என்று சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் கரு­து­வது அண்­மைய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது. மெட்­டா­வெர்ஸ் தள­மா­னது இவ்­வு­ல­கில் சாத்­தி­யப்­ப­டாத வகை­யி­லான அனு­ப­வங்­களை மக்­கள் முப்­ப­ரி­மாண வெளி­யில் பெறு­வ­தற்கு உத­வு­கிறது.

கருத்­தாய்­வில் கலந்­து­கொண்ட 66 விழுக்­காட்டு நிதி நிறு­வ­னங்­கள் சுற்­றுச்­சூ­ழல், சமூ­கம், நிர்­வா­கம் ஆகி­யவை தொடர்­பான விவ­கா­ரங்­க­ளைக் கண்­ட­றி­யும் தொழில்­நுட்­பத்­தில் முத­லீடு செய்­வ­தா­கக் கூறி­யுள்­ளன. இவை தொடர்­பான புதிய பொருள்­க­ளை­யும் சேவை­க­ளை­யும் உரு­வாக்­கு­வ­தாக 59 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்­ளன.

அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரில் செயல்­படும் 'எஃப்ஐ­எஸ்' எனும் நிதித் தொழில்­நுட்ப நிறு­வனம் இந்த ஆய்வை நடத்­தி­யது. இதில் ஆஸ்­தி­ரே­லியா, ஜெர்­மனி, ஹாங்­காங், அமெ­ரிக்கா, பிரிட்­டன், சிங்­கப்­பூர் உள்­ளிட்ட ஒன்­பது பகு­தி­க­ளைச் சேர்ந்த 2,000 நிர்­வா­கி­கள் கலந்­து­கொண்­ட­னர்.

கருத்­தாய்­வில், இணை­யத்­தின் அடுத்த கட்­ட­மா­கக் கரு­தப்­படும் மெட்­டா­வெர்­சில் வாய்ப்­பு­களை எதிர்­பார்ப்­ப­தாக 53 விழுக்­காட்டு நிதி நிறு­வ­னங்­கள் கூறி­யுள்­ளன.

நிதி அல்­லாத சேவை வழங்­கும் 40 விழுக்­காட்டு நிறு­வனங்­கள் இவ்­வாண்­டில் மெட்டா­வெர்­சில் தடம் பதிப்­பது முக்­கி­யம் என்று கருத்­து­ரைத்­துள்­ளன.

'டீஃபை' எனப்­படும் 'டீ சென்ட்­ர­லைஸ்டு ஃபைனான்ஸ்' எனப்­படும் புதிய நிதித் தொழில் நுட்­பம் மிக முக்­கி­ய­மான வளர்ச்சி வாய்ப்­பாக விளங்­கும் என்று 56 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்ள வேளை­யில், மின்­னி­லக்க நாண­யம் தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் தெளி­வாக இல்லை என்­பதே அதைப் பயன்­படுத்­து­வ­தற்கு முக்­கி­யத் தடை­யாக இருப்­ப­தாக 33 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் கூறி­யுள்­ளன.

கருத்­தாய்வு, சென்ற ஆண்டு ஜூலை மாதத்­திற்­கும் செப்­டம்­பர் மாதத்­திற்­கும் இடை­யில் நடத்­தப்­பட்­டது. சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­களைச் சேர்ந்த 160 நிர்­வா­கி­கள் இந்­தக் கருத்­தாய்­வில் கலந்­து­கொண்­ட­னர். இவர்­களில் 70 பேர் வங்­கி­கள், காப்­பீட்டு நிறு­வ­னங்­கள் போன்­ற­வற்­றைச் சேர்ந்­த­வர்­கள். மற்ற 90 பேரும் சில்­லறை விற்­பனை, போக்­கு­வ­ரத்து, உணவு-பானத்­துறை போன்­ற­வற்­றைச் சேர்ந்­த­வர்­கள்.