மூத்த அமைச்சர் தர்மன்: மின்னிலக்க நாணயத்திற்கு ஒழங்குமுறை அவசியம்

மூத்த அமைச்சர் தர்மன்: மின்னிலக்க நாணயத்திற்கு ஒழங்குமுறை அவசியம்

2 mins read
da4d2811-9673-456f-befc-c2459d0bf43e
-

பணம் சட்­ட­வி­ரோ­த­மா­கப் புழங்கு ­வ­தைத் தடுக்­க­வும் இதர நிதித்­துறை குற்­றச்­செ­யல்­களைத் தவிர்க்­க­வும் மின்­னி­லக்க நாண­யத்தை ஒழுங்­குப்­ப­டுத்த வேண்டிய தேவை இருக்­கிறது என்று டாவோஸ் உலகப் பொரு­ளி­யல் கருத்தரங்­கம் அமைப்­பில் ஒரு குழு­வி­னர் தெரி­வித்­த­னர்.

சிங்­கப்­பூ­ரின் மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­ரத்­னம் அந்­தக் குழு­வில் இடம்­பெற்­றி­ருந்­தார்.

மின்­னி­லக்க நாணய ஏற்­பாட்டு முறையை ஒழுங்­கு­ப­டுத்த வேண்­டிய தேவை இருக்­கிறது என்­பது தெள்­ளத்­தெ­ளி­வான ஒன்று என்று ­திரு தர்­மன் குறிப்­பிட்­டார்.

இருந்­தா­லும் வங்­கி­கள், காப்­புறுதி நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்றை நிதித்­துறை நிலைப்­பாட்டு கார­ணங்­க­ளுக்­காக ஒழுங்­கு­ப­டுத்­திய அதே வழி­யில் மின்­னி­லக்க நாண­யத்­தை­யும் ஒழுங்­கு­ப­டுத்த வேண்­டும் என்று வரும்­போது அடிப்­படை தத்­துவ ரீதி­யான கேள்வி ஒன்று தவிர்க்க இய­லா­த­தாக இருக்­கிறது என்று திரு தர்­மன் தெரி­வித்­தார்.

முற்­றி­லும் ஊக அடிப்­ப­டை­யில் இருக்­கும் ஒன்றைச் சட்­ட­மாக்­க­லாமா என்ற ஒரு கேள்வி எழு­கிறது என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் தலை­வ­ரும் சமூக கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான திரு தர்­மன் கூறி­னார்.

அல்­லது ஒழுங்­கு­மு­றைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டாத அந்­தச் சந்தை எப்­படி இருக்­கும்? அதில் ஈடு­படுவது உங்­கள் சொந்த பொறுப்பு என்­பதை நூற்­றுக்கு நூறு தெள்ளத்­தெ­ளி­வாக மக்களுக்கு விளக்­கு­வது சிறந்­த­தாக இருக்­குமா? என்று வின­விய திரு தர்­மன், தமது சிந்தனை இரண்டாவது கருத்தை ஒட்டி இருப்­ப­தா­கக் கூறி­னார்.

பய­னீட்­டா­ளர்­க­ளுக்­கான போதனை இடம்­பெ­ற­வேண்­டிய தேவை இருக்­கிறது என்று அவர் கூறினார்.

மின்­னி­லக்க நாண­யத்­தில் மேம்­போக்­காக ஈடு­பட்­டால் அது முட்­டாள்­த­ன­மா­கவே இருக்­கும் என்­பதை தெள்­ளத்­தெ­ளி­வாக விளக்க வேண்­டிய தேவை இருக்­கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இத­னி­டையே, அந்த விவா­திப்­பில் கலந்­து­கொண்டு பேசிய பிரான்ஸ் வங்கி ஆளு­நர் பிரான்­சுவா வில்லோ­ராய் டி காலாவ், மின்­னி­லக்க நாணய நிறு­வனங்­களில் இருந்து தொடங்கி வங்கி சாராத நிதி நிறு­வ­னங்­களுக்கு விதி­மு­றை­களை நடை­மு­றைப்­படுத்த நாடு­கள் உட­ன­டி­யாக முய­ல­வேண்­டும் என்­று கருத்து தெரிவித்தார்.