நிக்கல் முதலீட்டு மோசடி: பிணைத்தொகை $6 மி. ஆனது

நிக்கல் முதலீட்டு மோசடி: பிணைத்தொகை $6 மி. ஆனது

1 mins read
009a35f1-deda-4bb5-bdce-d088b2a129f8
-

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய முத­லீட்டு மோசடிகளில் ஒன்­றான நிக்­கல் வர்­த்தக மோச­டி­யின் கார­ண­கர்த்தா என்று கூறப்­படும் இங் யு ஸிக்கு (படம்) அனு­மதிக்­கப்­பட்­டி­ருந்த $4 மில்­லி­யன் பிணைத்தொகை $6 மில்­லி­ய­னாக அதி­க­மாக்­கப்­பட்­டது.

அவ­ருக்கு எதி­ரான குற்­ற­வியல் வழக்கு உயர் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட்­டு­ள்ளது. இதை­ய­டுத்து குற்­ற­வாளி என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டால் அவ­ருக்கு 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேற்­பட்ட சிறைத் தண்­டனை கிடைக்­கக் கூடும் என்று தெரி­கிறது.

இந்த பிணைத்தொகை ஒரு சாதனை அள­வுக்கு இருக்­கிறது என்று வழக்­க­றி­ஞர்­கள் சிலர் சொல்­கி­றார்­கள்.

இங், 35, இப்­போது விசா­ரணைக் காவ­லில் இருக்­கி­றார்.

பிணைத்தொகை முழு­வதும் செலுத்­தப்­பட்ட பிறகு அவர் வெளியே வர அனு­ம­திக்­கப்­படு­வார்.

பிணைத்தொகை­யைப் பெற அவர் மூன்று முறை தொலைபே­சி­யில் பேச­ நீதி­மன்­றம் அனு­மதி வழங்கி உள்­ளது.