புருணை சுல்தான்-வோங் சந்திப்பு
சிங்கப்பூரும் புருணையும் சுதந்திரம் பெற்றதுமுதல் தனித்துவ, நீண்டகால உறவை அனுபவித்து வருவதாக சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு உள்ளார். துணைப் பிரதமர் என்ற முறையில் புருணைக்கு முதல் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட அவர், புருணை சுல்தான் ஹஸனல் போல்கியாவையும் இதர அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்தார். ஆசியானில் இடம்பெற்று உள்ள இரு சிறிய நாடுகள் என்ற முறையில் சிங்கப்பூரும் புருணையும் ஒன்றையொன்று ஆதரித்து அணுக்கமாக இணைந்துப் பணியாற்றி வருவதாகவும் திரு வோங்
தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

