மனமகிழ் உல்லாசம்; நோயை மறந்து மகிழ்ந்த உள்ளங்கள்

மனமகிழ் உல்லாசம்; நோயை மறந்து மகிழ்ந்த உள்ளங்கள்

2 mins read
ddf37bcb-8279-4a1a-9cba-57bdba58cd82
-

'கிளப் ரெயின்போ' அறப்­பணி நிறு­வ­னம், நாள்­பட்ட நோயி­னால் பாதிக்­கப்­பட்­டுள்ள பிள்­ளை­களுக்கும் அவர்­க­ளு­டைய குடும்­பத்­தா­ருக்­கும் பல­ வ­ழி­களில் உதவி வரு­கிறது.

உடற்­ப­யிற்சி சிகிச்சை மட்­டு­மன்றி, உள­வி­யல், நிதி, கல்வி, சமூக ஆத­ரவு உள்­ளிட்ட பல­வற்­றின் தொடர்­பில் பல்­வேறு நிகழ்ச்­சி­களை நடத்தி 1,000க்கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு அந்த அமைப்பு உத­வு­கிறது.

கிளப் ரெயின்போ, 67 பிள்ளை­கள் உள்­ளிட்ட குடும்­பத்­தி­னர், ஊழி­யர்­கள், மருத்­து­வத் தொண்டூ­ழி­யர்­கள் என மொத்­தம் 288 பேரை கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி­வரை சொகு­சுக் கப்­ப­லில் நான்கு நாள்­கள் சுற்­று­லா­வாக பினாங்கு நக­ருக்கு அழைத்­துச் சென்று அந்­ந­க­ரைச் சுற்­றிக்­காட்டி பிறகு அழைத்து வந்­தது.

ஆடல் பாடல் நிகழ்­வு­கள், அலங்­கா­ரப் போட்­டி­கள், தாள் கைவி­னைப் பொருள்­கள் பயிற்சிப் பட்­டறை, விளை­யாட்­டு­கள், பல வகை உண­வு­கள், சக்­கர நாற்­காலி­க­ளைப் பயன்­ப­டுத்­தும் வசதி, முத­லு­தவி மருத்­துவ வச­தி­கள் உள்­பட பல­வும் சுற்­று­லா­வின்­போது ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தன. பிள்­ளை­க­ளுக்குப் பரி­சு­களும் வழங்­கப்­பட்டு புகைப்­படங்­களும் எடுக்­கப்­பட்­டன.

பெரு­மூளை வாதத்­தி­னால் பாதிக்­கப்­பட்­டுள்ள 17 வய­தான துர்­கேஸ்­வ­ரன் கிருஷ்­ணன், தன் குடும்­பத்­தி­ன­ரு­டன் சுற்­று­லா­வில் கலந்துகொண்­டார். நான்கு சகோ­த­ரி­க­ளு­டன் பிறந்த இவர் தன்­னு­டைய தாயார், இரட்டை சகோ­த­ரி­யு­டன் பய­ணித்­தார்.

"நான்கு நாள்­களும் பல குடும்­பங்­க­ளு­டன் ஒன்­றா­கச் சென்று வந்­தது மிக­வும் மகிழ்ச்­சி­யாக இருந்­தது. என் மகன் இந்த அள­வுக்கு மகிழ்ச்­சி­யாக இருந்­ததை இது­வரை நான் கண்­ட­தில்லை," என்று துர்­கேஸ்­வ­ர­னின் தாயார் திரு­வாட்டி நங்கை கிருஷ்­ணன், 50, கூறி­னார்.

தசை பல­வீ­ன­நோயால் பாதிக்­கப்­பட்ட ஷீரத் சஞ்­சய், 18, தன் தாயார், பாட்­டி­யு­டன் இச்­சுற்­று­லா­வில் பங்­கு­கொண்­டார்.

"கிளப் ரெயின்போ அற­நி­று­வனத்­தின் பல்­வேறு செயல்­திட்­டங்­களும் பிள்­ளை­கள் எதிர்­கா­லத்­தில் தனித்து வாழ தயார்­ப­டுத்தி தன்­னம்­பிக்­கையை வளர்க்­கின்றன," என்று சஞ்­சய்­யின் தாயார் வனிதா முத்­து­கோ­பால், 41, கூறி­னார்.

இத்­த­கைய பிள்­ளை­க­ளுக்­கும் அவர்­க­ளின் குடும்­பத்­தா­ருக்­கும் இது­போன்ற பொழு­து­போக்கு அம்­சங்­கள் தேவை என்­பதை உணர்த்­தும் நோக்­கு­டன் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இச்சுற்று­லா­வில் பங்­கு­கொண்­டது மகிழ்ச்சி ­அளிப்­ப­தாக இந்­நி­று­வ­னத்­தின் தொண்­டூ­ழிய மருத்­து­வ­ரான டாக்­டர் அஸ்­வின் வாரி­யர் கூறினார்.

"பாதிக்­கப்­பட்ட பிள்­ளை­களுக்குத் தேவைப்­படும் அதே மன வலி­மை­யும் ஆலோ­ச­னை­களும் பெற்­றோ­ருக்­கும் பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளுக்­கும் வேண்­டும்.

"அத­னா­லேயே முழு­மை­யான அணு­கு­மு­றை­யாக மொத்த குடும்­பத்­திற்­குமே இயன்­ற­வரை பல சேவை­கள் வழங்கி வரு­கி­றோம்," என்று இந்­நி­று­வ­னத்­தின் தலைவரும் குழந்­தை­கள் நல மருத்­து­வ­ரு­மான டாக்­டர் சஷி­குமார் கண­பதி கூறி­னார்.

கிளப் ரெயின்போ அறப்­பணி அமைப்­பிற்கு நன்­கொ­டை­ய­ளிக்க விரும்­பு­ப­வர்­கள் https://www.clubrainbow.org/take-action இணை­யத்­தள முக­வ­ரியை நாட­லாம்.