உலகப் பொருளியல் நிச்சயமில்லாத நிலையில் இருக்கிறது.
இந்தச் சூழலில் தளவாடப் போக்குவரத்து, சுற்றுப்புறத்திற்கு உகந்த எரிபொருள் ஆகியவற்றில் சிங்கப்பூரும் போர்ச் சுக்கல் நாடும் ஒத்துழைப்பை அதிகப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக போர்ச்சுக்கல் வெளி யுறவு அமைச்சர் ஜாவோ கோமிஸ் கிரேவின்கோ தெரிவித்தார்.
இரண்டு நாடுகளின் மக்களுக்கு இடையே தொடர்புகளை அதிகமாக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதோடு, தொழில்துறையினர், அறிவியல் அறிஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோருக்கு இடையில் தொடர்புகளை அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்
ஆர்ச்சர்ட் ரோடு பகுதியில் உள்ள வின்ஸ்வேண்ட் ஹவுஸ்-Iல் செயல்படும் போர்ச்சுக்கல் தூதரகத்தில் கிரேவின்கோ பேட்டி அளித்தார். சிங்கப்பூருக்கும் போர்ச்சக்கலுக்கும இடையில் அரசதந்திர உறவு ஏற்பட்டு 2021ல் 40 ஆண்டுகள் நிறைவடைந்தன.
சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளுக்கு மாறுவதுஎன்பது சிங்கப்பூர் உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்குமே ஒரு சவால் என்று தெரிவித்த அவர், இருநாடுகளும் ஒத்துழைக்க அந்தத் துறையில் வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்டாரர்.
இரு நாடுகளின் மக்களுக்கு இடைப்பட்ட தொடர்பு பற்றி கருத்து கூறிய அவர், இருநாடுகளையும் சேர்ந்த தொழில்துறையினரில் மேலும் பலர் இரு நாடுகளுக்கும் இடையில் பயணம் மேற்கொள்ள முடியும் என்றார்.
போர்ச்சுக்கல் நாட்டுக்குத் தொழில்துறை தலைவர்கள் செல்லும்போது அங்குள்ள வாய்ப்புகளைக் கண்டு அவர்கள் வியந்துபோவார்கள் என்றும் அவர்களை வரவேற்க போர்ச்சுக்கல் தயாராக இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

