மோனலிசா
தமிழ் எழுத்துகளை சிறுவர்கள் கற்கவும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்க்கவும் அண்மையில் கதை சொல்லும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
'தி ஆர்ட்ஸ் ஹவுஸ்' ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிண்டாவின் ஆதரவுடன் சிறுவர்கள் பங்குபெற்றனர்.
'கிரியைடி எஸ்ஜி' (KriyaiD SG) எனும் சமூக நிறுவனத்தின் இணை நிறுவனரும் எழுத்தாளருமான 34 வயது தேவி விஜயன் இந்நிகழ்வில் தன்னுடைய 'அன்பான அ' எனும் நன்னெறி புத்தகத்தின் கதையைச் சிறுவர்களுக்குக் கூறினார். சிறுவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், கதையையொட்டிய கேள்வி-பதில் அங்கமும் விளையாட்டு களும் நடைபெற்றன.
"சிறாரின் கவனத்தை ஈர்ப்பது மிகவும் சவால்மிக்கது. அவர்களது கவனம் எளிதில் சிதறிவிடும். அவர்களுக்கு சுவாரசியமான முறையில் கதையின் வழியாக வாழ்
வியல் கருத்துக்களைக் கூறுவது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது" என்று கூறினார் திருவாட்டி தேவி. மேலும் இந்நிகழ்வில் சிறுவர்கள் தங்களுடைய பெற்றோருடன் இணைந்து காகிதங்களில் வரையப்பட்ட கோலங்
களுக்கு வண்ணம் தீட்டி அலங்
கரிக்கும் அங்கமும் இடம்பெற்றது. இம்மாதம் 8ஆம் தேதி உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நான்கு முதல் ஒன்பது வயதிற்குட்பட்ட மாணவர்கள் பங்குபெற்றனர்.
"ஆசிரியர் கூறிய கதை சிறப்பாக இருந்தது. அம்மாவுடன் சேர்ந்து வண்ணப் பொடியில் முதன்முதலில் கோலமிட்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது" என்று கதை சொல்லும் நிகழ்வில் பங்கேற்ற சிறுவர்களில் ஒருவரான 5 வயது பாலர் பள்ளி மாணவர் சுகந்தன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

