வாட்டர்லூ ஸ்திரீட்டில் உள்ள கத்தோலிக்க நிலையத்திலும் ஆர்மீனியன் ஸ்திரீட்டில் உள்ள பைபிள் ஹவுசிலும் வெள்ளை நிறப் பொருள்கள் காணப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் மூன்று பேரை காவல்துறை கைது செய்து இருக்கிறது.
அந்த மூவரில் இருவர் 52, 66 வயதுள்ள ஆடவர்கள். மற்றொருவர் 63 வயது மாது.
பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்செயல் பற்றி புலன்விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்தது.
புலன்விசாரணையில் இந்த மூவரையும் சேர்த்து மொத்தம் 11 பேர் உதவி வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

